விபச்சாரத்துக்கு பயன்படுதா அமிர்தி "சூ"?  பசியால் வாடும் விலங்குகள்! 

 ம.பா.கெஜராஜ்,

  வேலூர் மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடிவாரத்தில் உள்ள அமிர்தி வனத்தில் மிருககாட்சி சாலை "(சூ)" ஒன்று உள்ளது. இங்கு மான்கள், முதலை, மயில், வெள்ளை மயில் மலைப்பாம்பு, நட்சத்திர ஆமை மற்றும் முள்ளம்பன்றி உள்ளிட்ட விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறன.

  அதைத்தவிர ஒப்புக்கு சப்பானான ஒரு பைப் பந்தல், ஒடிந்து போன சறுக்குமரம், ஓரளவுக்கு சுமாரான பூங்கா, பாதுகாப்பற்ற நீர்வீழ்ச்சி, ஒரு ஓடை மற்றும் விஐபிகளுக்கென ஒரு தங்கும் விடுதி ஆகியவை உள்ளன.

  இவையாவுமே வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ளன.

 வேலூரைப் பொறுத்தவரை அம்மக்களுக்கு பொழுது போக்கே இந்த ஒரு "சூ" தான். ஆனால் மேற்கண்ட மிருகங்களையும், அதற்கான இடங்களையும் வனத்துறையினர் குட்டிச்சுவராக்கியுள்ளார்கள். அதாவது பராமரிப்பே இல்லை. இதனால் மக்கள் கூட்டம் அவ்வளவாக வருவதில்லை.

  மேலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளுக்கு கால்வயிறு கஞ்சிதான் ஊற்றுகிறார்கள். பாவம் அந்த முதலைகள் சைவமாக வளர்க்கப்படுகிறது.

  இந்த லட்சணத்தில் நுழைவுக்கட்டணமாக பெரியவருக்கு ரூ.10, சிறியவருக்கு ரூ.5,சைக்கிள் ரூ.5, மோட்டார் சைக்கிள் ரூ.25/- கார்,வேன் ஆட்டோ, 50, லாரி, ஆட்டோ, வேன் ஆகியவைகளுக்கு 250/- கேமிராவுக்கு ரூ.25, வீடியோ கேமிராவுக்கு ரூ100/- என வசூல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். 

   இந்த கட்டணத்தை செலுத்தி செல்வோரில் கள்ளக் காதல் ஜோடிகளும், விபச்சார கும்பல்களுமே அதிகம்.

  இப்படிப்பட்ட சூழலைப் பயன்படுத்தி உள்ளூர் இளைஞர்கள் பல பெண்களை நாசம் செய்து வருகிறார்கள்.

 வெளியே தெரிந்தால் அசிங்கம் என கருதி பலர் விஷயத்தை மூடி மறைக்கின்றனர்.

  மேலும் இந்த விஷயங்கள் அனைத்துமே அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

  அவர்களுக்கு சிறப்பு கவனிப்புகள் கிடைப்பதால் எதையுமே கண்டுக் கொள்வதில்லை.

  இந்நிலையில் அங்கு எதற்காகவோ வந்த ஒரு பெண்ணை அங்குள்ள இளைஞர்கள் சிலர் கூடி செயின் பறித்ததுடுடன் அவரை புதருக்குள் இழுத்துச் சென்றனர். சுதாரித்துக் கொண்ட அந்த பெண் ஊரை கூட்டி ஒரு இளைஞரை பிடித்து செறுப்பால் அடித்தார்.

    இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து அங்கு தடியுடன் வந்த வனத்துறையைச் சேர்ந்த அலுவலர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அந்த இளைஞர்களை வழியனுப்பிவைத்தார்.

   இது குறித்து பாபு என்பவர் கூறுகையில், நிறையபேர் தப்பான பொம்பளைகளை இங்கே காட்டுக்குள் கூட்டி வந்து இருந்துவிட்டு செல்கிறார்கள். பாரஸ்ட்டு காருங்க அதை கேக்கறது இல்லை.

  அந்த மாதிரி வரும் பெண்களை கீழே இருந்து வரும் பையன்கள் தூக்கிட்டு காட்டுக்குள் போய்விடுகின்றனர். இதனால் குடும்பமாய் வரும் எங்களைப் போன்றோருக்க நிம்மதி போய்விட்டது.

 எது நடந்தாலுமே மலையேறி ஜமுனாமரத்தூர் போலிஸ் ஸ்டேஷனுக்கு போவனும்.அமிர்தியில் பாரஸ்டு காரங்களை நம்பி பிரயோனம் இல்லை. ஒரு சின்ன போலிஸ் ஸ்டேஷன் வேண்டும் என்றார்.

குறிப்பு:-ஜமுனாமரத்தூர் மற்றும் ஜவ்வாது மலைகளிலுள்ள சந்தன மரங்களை கூட்டு சேர்ந்து அழித்துவிட்டதால், தற்போது சில தாய் சந்தன மரங்கள் மட்டும் உள்ளன. அவற்றைக் கூட வன அதிகாரிகள் பாதுகாக்க முயலாமல் மிருகங்களுக்கு உணவு போடுவதில் கமிஷன் அடிப்பது முதல் மரக்கடத்தல் மற்றும் எட்டிமர பட்டை விற்பது வரை அனைத்திலும்  பணம் பார்த்து வருகிறார்கள். 

  இந்த லட்சணத்துல பல கோடி ரூபாவில் அமிர்தி சூ புதுப்பிக்கப்படுமென செய்திகள் வேறு ச்சே!?