பணம் பறிக்கும் நிருபர்கள் மீது எஸ்.பி.யிடம் புகார்!

விக்கி,
பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில் பணம் பறிப்பதற்காகவே ஒரு குரூப் சுற்றித்திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அதைக்கட்டுப்படுத்த முடியாமல் பி.ஆர்.ஓக்கள் கையை பிசைந்து வருகிறார்கள்.
இந்நிலையில், கொடைக்கானலில் பிரபல பத்திரிக்கை நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மிரட்டி பணம் வசூலிப்பதாக நிருபர்கள் சிலர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரபல பத்திரிக்கை நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மிரட்டி பணம் வசூலிப்பதாக மாற்று நிறுவனங்களில் பணியாற்றும் நிருபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பிரபல வாரம் இருமுறை இதழ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாம்.