மூன்று மாத ஊதியத்தில் சிறார்களுக்கு துணி மணி! இவரல்லவா எம்.எல்.ஏ.!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
இராஜபாளையம் தொகுதி, பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள லைட் ஆஃப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என 3 காப்பகத்தில் உள்ள 201 ஆதரவற்ற குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ரெடிமேட் ஆடைகளை வாங்கி கொடுத்தார்.
நான்கு வருடங்களாக தீபாவளிக்கு புத்தாடை வழங்குவது போல் தற்போதும் ஐந்தாவது முறையாக அக்குழந்தைகளை இராஜபாளையம் ஆனந்தம் சில்க்ஸ் ஜவுளி கடைக்கு அழைத்து வந்து துணிகளை வாங்கி கொடுத்து மகிழ்ந்தார்.
தனது 4,5,6 வது மாத ஊதியத்திலிருந்து ( ரூபாய் 3,15,000) குழந்தைகளுக்கு பிடித்தமான புத்தாடையை குழந்தைகளே தேர்வு செய்து எடுத்தனர்.
இந்நிகழ்வில் குழந்தைகளுடன் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே ஆகவே அனைவரும் சிறந்தமுறையில் கல்வி கற்க வேண்டும்.
கருணாந்தி ஆதரவற்ற குழந்தைகளுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார், அதுபோல் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவிடுவார்.
மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தங்கம் தென்னரசும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினராகிய நானும் இராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் அன்றும் இன்றும் என்றும் உறுதுணையாக இருப்போம் எனக் கூறினார்.
அதனைத்தொடர்ந்து குழந்தைகளை கவனமாக காப்பகத்திற்கு செல்லுமாறும், தீபாவளி திருநாளை அனைவரையும் போல் மகிழ்ச்சியாக கொண்டாடிட வேண்டுமெனவும் நீங்கள் ஆதரவற்ற குழந்தைகள் அல்ல அனைவரின் ஆதரவையும் பெற்ற குழந்தைகள் எனக்கூறி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.