உயிருக்கு பயந்தவர்கள் பாதுகாவல் பணிக்கு வந்திருக்க கூடாது! அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!

கு.அசோக்,
இளம் சிறார் தப்பி ஓடியது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரிகளுடன் ஆலோசனை - தமிழகத்தில் பல இளம் குற்றவாளிகள் உள்ள சிறைகளில் தப்பி ஓடும் சம்பவங்கள் நடக்கிறது அமைச்சர் ஒப்புதல் - உயிருக்கு பயந்தவர்கள் பாதுகாவலர் பணிக்கு வந்திருக்க கூடாது அமைச்சர் கீதா ஜீவன் வேலூரில் பேட்டி.
வேலூர்மாவட்டம், வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வருகை தந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பின்னர் காகிதபட்டறையில் உள்ள இளம் சிறார் குற்றவாளிகள் 6 பேர் தப்பி ஓடிய இடத்தை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்
முன்னதாக அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில் 6 சிறார் குற்றவாளிகள் பாதுகாவலர்களை எதிர்த்து தப்பி ஓடிவிட்டனர்.
ஆனால் இல்லத்தில் அமைதியான சூழ்நிலை உள்ளது இதனை தடுக்க என்ன செய்வது என அதிகாரிகளுடன் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பது குறித்து ஆய்வு செய்தோம்.
அதில் நிரந்தரமாக தீர்வு காணவும் ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளோம். சிறுவர்களை பிடிக்க காவல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொடுங்குற்றம் செய்த சிறுவர்கள் இளம் சிறார்களும் பாதுகாப்பு இல்லங்களில் உள்ளனர். இதனால் அங்கு அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.
பாதுகாப்பு இல்லத்தின் ஊழியர்கள் பணிபாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கபடும்.
எல்லா இடங்களிலும் சிறார் குற்றவாளிகள் தப்புவது நடக்கும். மதுரை, செங்கல்பட்டிலும் நடக்கிறது இதனை தடுக்க முடியாது.
அவர்கள் தகராறின் மூலம் தங்களின் தேவையை சாதித்து கொள்கின்றனர்.
அரசு இதில் தலையிட முடியாது சிறார் சட்டத்தை தான் பின்பற்ற வேண்டியுள்ளது.
எல்லா பாதுகாப்பு இல்லங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது சிறார்கள் பிரச்சனை செய்த போது அவர்களை சமாதானபடுத்த வெளியில் உணவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாவலர்கள் அச்சமின்றி பணி செய்ய வேண்டும் இல்லையென்றால் அவர்கள் பாதுகாவல்ர்கள் பணிக்கு வந்திருக்க கூடாது என கூறினார்.