ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாத ஆணையை திரும்ப பெறுங்கள்!ஜவாஹிருல்லா பேட்டி!

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாத ஆணையை திரும்ப பெறுங்கள்!ஜவாஹிருல்லா பேட்டி!

கு.அசோக்,

சிறைவாசிகள் விடுவிப்பில் புதியதாக போடப்பட்ட அரசாணையால் 7தமிழர்கள் கூட விடுதலையாக முடியாத நிலை ஏற்படும் எனவே அதனை திரும்ப பெற வேண்டும்  - மழைகாலத்தில் அதிக அளவு நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒரு நீர் நிபுணர் குழுக்களை அமைத்து மழைநீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா பேர்ணாம்பட்டில் பேட்டி.

  வேலூர்மாவட்டம்,பேர்ணாம்பட்டு நகரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகளை  சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வழங்கினார்.

 மேலும் நேற்று வீடு இடிந்து பலியான குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதலை தெரிவித்தார்.

 நுற்றுக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கைதிகளாக உள்ள இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

  இதில் தமிழக அரசு புதியதாக சிறை கைதிகள் விடுதலையில் ஒரு ஆணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

  இந்த அரசாணையால் அதிகமானோர் விடுதலையாக முடியாத குறிப்பாக ராஜுவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் கூட இந்த அரசாணையால் விடுதலைக்கு வாய்ப்பில்லாமல் போகும்.

 எனவே சிறைகைதிகள் விடுதலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

 அனைவரையும் விடுதலை செய்ய முன் வரவேண்டும், தமிழகத்தில் தற்போது அதிக அளவு மழைபெய்துள்ளது தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்  இந்த மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது,.

   சென்னைக்கு ஒரு மழைநீர் நிபுணர் குழு அமைத்ததை போல் பாலாறு தென் பென்னை ஆறு போன்ற ஒவ்வொரு ஆற்றுக்கும் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.

  ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி தமிழக அரசு மழைகாலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க வேண்டும்.

 அதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் பேர்ணாம்பட்டில் வீடு இடிந்து பலியானவர்களின் குடும்பங்களை சேர்ந்த தகுதியுள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் வீடு கட்டிகொடுக்க வேண்டும், அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்  என்று கூறினார்.

 இந்த நிகழ்ச்சியில் தமுமுக் மாநில செயலாளர் ஏஜாஸ் அகமது,மாவட்டத்தலைவர் ஜாகீர் உசேன்,மாநிலதுணைதலைவர் அமீது உட்பட பலர் கல்ந்துகொண்டனர்.