ஆடுதிருடர்களால் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்!

ஆடுதிருடர்களால் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்!

சுவாமிநாதன்,

 திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்  பூமிநாதன் என்பவரை ஆடு திருடர்கள் வெட்டி கொலை செய்துள்ளார்கள்.

கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 ஆடு திருடியவர்களை மடக்கி பிடிக்க விரட்டி சென்ற போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

 கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி என்கிற கிராமத்துக்கு அருகில்  பணியிலிருந்த ஓரு டூவீலரை தடுத்து நிறுத்திய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் 2 திருடர்களை பிடித்தார்.

 இவர் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியவர்,

 இந்நிலையில், நேற்றிரவு ரோந்து பணியியில் இருந்த பூமிநாதன் நவல்பட்டு ரோட்டில் 3 டூவீலர்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்தினார். அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர்.

 பூமிநாதன் அவர்களை டூவீலரில் விரட்டி சென்று இருவரை பிடித்தார்.

 அப்போது அந்த ஆசாமிகள் திருச்சி புதுக்கோட்டை மெயின்ரோட்டில் மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் இருவரை பிடித்தார்.

 மேலும்2 டூவீலர்களில் தப்பிச் சென்ற நபர்கள் திரும்பி வந்து பூமிநாதனிடம் தங்களது சகாவை விடுமாறு மிரட்டியுள்ளனர்.

 ஆனால் பூமிநாதன் முடியாது என கூறயதால், ஆத்திரம் அடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளல் வெட்டினர்.

 இதில் படுகாயமடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார்.   திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர் என்று தற்போதைய தல்கவல்கள் தெரிவிக்கின்றன.

 கொலைசெய்யப்பட்ட பூமிநாதனுக்கு வயது 56 ஆகிறது. கவிதா என்கிற மனைவியும், சுகபிரசாத் என்கிற மகனும் உள்ளனர்.மகன் தற்போது எம்பிஏ படித்து வருகிறார்.

  போலிசார் வேறு பல கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 உண்மை வெளிவந்தால் சரி.