தென்னம் செடிக்கு மத்தியில் பெண்டல் பெண்டலாக கஞ்சா!

தென்னம் செடிக்கு மத்தியில் பெண்டல் பெண்டலாக கஞ்சா!

   கு.அசோக்,

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நூதன முறையில் கஞ்சா கடத்திய வேனை மடக்கி சோதனை 2 பேர் தப்பி ஓட்டம் மூன்று பேர் கைது

 வேலூர்மாவட்டம்,பள்ளிகொண்டா அருகேயுள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய போதை பொருள் காவல்துறைக்கு பெரிய அளவில் கஞ்சாவை கடத்தப்போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய அரசின் போதை பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் கடந்த வாரகாலமாக தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

 இதில் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு வேனில் தென்னங்கன்றுகளை ஏற்றிகொண்டு ஈரோடு நோக்கி செல்வதாக அறிந்து அதனை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

  அப்போது ரெண்டு பேர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் வேனில் இருந்த மூன்று பேரை போலிசார் மடக்கி பிடித்தனர்.

 வேன் முழுவதும் தென்னங்கன்றுகளை அடுக்கிவிட்டு அடியில் 210 கிலோ கஞ்சா பெண்டல்களை ஆந்திர மாநிலத்திலிருந்து ஈரோட்டிற்கு கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

   இதனை அடுத்து வேனில் இருந்த ஈரோடு சென்னிமலை பகுதியை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி,கும்பம்பாளையம் பகுதியை சேர்ந்த பரமசிவம் ,தாமோதரன் ஆகிய மூன்று பேரை கைது செய்ததுடன் வேனையும் போதை பொருட்களையும் பறிமுதல் செய்து பள்ளிகொண்டா காவல்துறையில் ஒப்படைத்தனர்.

 மத்திய அரசின் போதை பொருள் தடுப்பு பிரிவினரே நேரடியாக போதை பொருள் கடத்தலை தடுத்து நிறுத்தி ஆட்களை பிடித்து ஒப்படைத்துள்ளது இங்குள்ள அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.