ஆளுநர் ம... ராண்டி, ல...க....பால் திமுக பேச்சாளரின் ஆபாச பேச்சு! வழக்கு!!

ஆளுநர் ம... ராண்டி, ல...க....பால் திமுக பேச்சாளரின் ஆபாச பேச்சு! வழக்கு!!

ம.பா.கெஜராஜ்,

சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கம் போலவே அவரது ஸ்டைலில் பேசினார்.

  அப்போது, அவர் ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் பேசியிருக்கிறார். ஆளுநர் ம... ராண்டி, ல...க....பால் என்றெல்லாம் பேசியுள்ளார்.  இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, கவர்னர் அலுவலக துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணைய வழியிலும், தபால் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   

    இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலாளர், தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு எதிராக, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கிருஷ்ண மூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பு:-மேற்படி ஆபாச மற்றும் அடாவடி பேச்சாளரான திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை அக்கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.