கலெக்டர் அரங்கமே இந்த லட்சணத்தில் இருக்கு?இப்ப டெங்கு வராதா?

ஜி.கே.சேகரன்,
கடல் போல் காட்சி அளிக்கும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் அரங்கு மைதானம். கலெக்டர் அலுவலகமே இப்படி என்றால் பொது மக்களின் கதி என்ன மக்கள் குற்றச்சாட்டு.
திருப்பத்தூர் மாவட்டம்,திருப்பத்தூரில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் அரங்கு மைதானத்தில் வடகிழக்கு பருவமழையின் பாதிப்பால் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு முகாம், விவசாயிகளின் ஆலோசனை கூட்டம், மாணவர்களின் கல்விக் கடன் முகாம், கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பூசி முகாம் உள்ளிட்ட ஏராளமான முகாம்கள் இங்கு தான் நடந்து வருகின்றன.
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் தினந்தோறும் வந்து போகக்கூடிய இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்கிற முக்கியத்துவம் கூட கொடுத்து மழைநீரை வெளியேற்றாமல் இப்படி மழை நீர் தேங்கி கடல் போல் காட்சி அளிப்பதை கண்டுகொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் வைத்திருக்கிறது.
இவர்கள் எப்படி பருவ மழையின் தாக்கத்தால் வீடுகளை இழந்து தொழில் செய்ய முடியாமல் வருமானம் இழந்து உணவு உடை இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள் என பொது மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.
இப்ப டெங்கு வராதா?