நாய்கறியா? ஆட்டுக்கறியா?
டி.முகமது இர்ஃபான்
நாய் கறியா... ஆட்டுக்கறியா என்று கிளம்பிய பிரச்சனையால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இருந்த போதும் அதனை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா வடமதுரை காவல் நிலையம் எதிரே சர்க்கரை மற்றும் கலீல் என்பவர்கள் இறைச்சி கடை வைத்திருப்பவர்கள்.
இவர்கள் இருவரும் தங்களது இறைச்சி கடைகளில் செத்துப்போன ஆடுகளையும், கெட்டுப்போன இறைச்சியையும் விற்பனை செய்து வந்ததாக பிரச்சனை கிளம்பியது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவர்கள் கடையில் இறைச்சி விற்பனை ஜரூராக நடந்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் பிரச்சனை செய்துள்ளார்.
உங்கள் கடைகளில் செத்து போன ஆடுகளையும், கெட்டுப் போன இறைச்சியை விற்குறீங்க, நாய்கறியை ஆட்டுக்கறி என்று விற்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம் என்றுகூச்சல் போட்டிருக்கிறார்.
இதுகுறித்த தகவல் பேரூராட்சி குத்தகைதாரர் ஜோதி என்பவருக்கு சென்ற பின்னர், வடமதுரை பேரூராட்சி அதிகாரிகளுக்கு அவர் தகவல் அளித்தார்.
அதன்பேரில் அங்கு வந்த பேரூராட்சி ஊழியர்களும் அதிகாரிகளும் அலங்கிருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து குழிதோண்டி புதைத்தனர்.
அப்படி புதைக்கும் போதுய் பிளீச்சிங் பவுடர் போட்டு மூடிவிட்டனர்.
இவ்வளவு நடந்தும் தரமற்ற கறி விற்றதாக சர்க்கரைக்கும் கலீலுக்கும் அபராதம் விதிக்கவில்லை என்பதால் இந்த கலப்பட இறைச்சி விற்பனையை பேரூராட்சி ஊழியர்கள் ஆதரிக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஒருவர் தெரிவிக்கையில் கைபற்றிய இறைச்சியை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி அது என்னமிருகத்தின் இறைச்சி என்று ஆய்வு செய்திருக்க வேண்டுமே? அப்படி செய்யாதது தவறு என்று சொல்கிறார்.
அப்போ எந்த இறைச்சியைத்தான் நம்பி சாப்பிடுவதோ தெரியலையே?