காட்பாடியை நோக்கி குவியும் கஞ்சா? சலைக்காமல் தடுக்கும் போலிஸ்!

காட்பாடியை நோக்கி குவியும் கஞ்சா? சலைக்காமல் தடுக்கும் போலிஸ்!

ஜி.கே.சேகரன்,

தமிழக ஆந்திரா மாநில எல்லை சோதனை சாவடியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல். வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

 ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்துவது வாடிக்கையாகி வருகிறது.

 அதை தடுக்க வேலூர் மாவட்ட காவல்துறை மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

  இந்நிலையில் எஸ்.பி.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப. அவர்கள் உத்தரவின் பேரில் போலீசார் மாநில எல்லை சோதனை சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதனை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை தமிழக ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடியில் காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் லெனின் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்பொழுது திருப்பதியில் இருந்து கரூர் செல்லும் அரசு பேருந்தில் சோதனை மேற்கொண்டனர்.

 அந்த பேருந்தில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ராகுல்தாஸ் என்பவர் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ராகுல்தாஸை கைது செய்து காட்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 இதே போல் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக சோளிங்கர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் முருகானந்தம் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த வாலிபரை விசாரித்தனர். விசாரணையில் வாலிபர் கஞ்சா விற்பனை செய்வது உறுதியனது.

 தொடர்ந்து விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் விசாரணை செய்தபோது இவர் திருவள்ளூர் மாவட்டம் மரிகுப்பம் சேர்ந்தவர் ராஜேஷ் 28 என்பதும் தெரிய வந்தது தொடர்ந்து வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.