. இடி தாக்கி தாத்தா பேத்தி பலி!

ஜி.கே.சேகரன்,
ஆற்காடு அடுத்த திமிரி ஆயிரம் மங்களத்தில் மாட்டுக்கு வைக்கோல்களை அடுக்கி கொண்டிருந்த போது இடி தாக்கி தாத்தா பேத்தி பலி
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி ஆயிரம் மங்கலம் பாடசாலை தெருவை சேர்ந்தவர் 65-வயது விவசாயியான வெங்கடேசன். இவருடைய மகள் இந்திரா மற்றும் அவரது மகள் லாவண்யா 17 வயது ஆகிய இருவரும் வெங்கடேசன் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் லாவண்யா அதே பகுதியில் உள்ள வளையாத்தூர் என்ற கிராமத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
அப்படியிருக்க நேற்று இரவு மழை பெய்த காரணத்தால் வீட்டின் பின்புறம் வைகோல்களை வெங்கடேசன் மற்றும் அவரது பேத்தி லாவண்யா ஆகிய இருவரும் அடுக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது வானத்தில் இடி மின்னல் ஏற்பட்டது. இடி தென்னை மரத்தில் விழுந்து அருகே இருந்த தாத்தா பேத்தி ஆகிய இருவரை தாக்கியது.
இடிதாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாத்தா பேத்தி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திமிரி அருகே வைக்கோல்களை அடுக்கி கொண்டிருந்த போது பலத்த மழையின் காரணமாக மின்னல் தாக்கி தாத்தா பேத்தி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.