தோல் கழிவு நீரால் பாழாய் போகும் பாலாறு!

தோல் கழிவு நீரால் பாழாய் போகும் பாலாறு!

 ஜி.கே.சேகரன்,

  பாலாற்று வெள்ளத்தில் தோல் கழிவு நீர் கலந்து நுரை பொங்கி துர்நாற்றம் வீசி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

 இப்படிப்பட்ட தொடர் அவலத்தினை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

 திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் அதன் பிற பகுதிகளான வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தென்மேற்கு பருவமழை பொழிந்து வருகிறது.

 இந்நிலையில் நேற்று இரவு விடிய விடிய இப்பகுதிகளில் பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.

 இந்நிலையில் அதில் தோல் கழிவு நீர் கலந்து விடப்பட்டுள்ளதால் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியை கடந்து செல்லும் மழைவெள்ளம் துர்நாற்றம் வீசியின் நுரைப்பொங்க காட்சியளிக்கிறது.

 இப்பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து ஆபத்தான இராசாயன கழிவு நீர் பாலாற்றில் கலந்து விடப்படுவதாக குற்றச்சாட்டு எழும் நிலையில், வாணியம்பாடி தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தின் நிர்வாகத்தினர் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று சப்பைகட்டு கட்டுகிறார்கள்.

 வாணியம்பாடி நகர பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக பாலாற்றில் கலப்பதால் இதுபோல நிகழ்வுகள் தொடர்வதாகவும் விளக்கம் அளித்து தோல் தொழிற் சாலையினரை காப்பாற்றுகின்றனர்.  இந்த பிரச்சினை குறித்து எந்த நடவடிக்கையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுக்காததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.