திருப்பத்தூர் புதிய பேருந்து நிலைய நகராட்சி கழிப்பிடத்தின் அவல நிலை கண்டுகொள்ளுமா நகராட்சி!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலைய நகராட்சி கழிப்பிடத்தின் அவல நிலை கண்டுகொள்ளுமா நகராட்சி!

k.asokh,

 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வி.சி.எம். தெரு அருகே புதிய பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.

 இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பெங்களூர் திருவண்ணாமலை பாண்டிச்சேரி சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் லட்சக்கணக்கான பயணிகள் திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.

 இந்நிலையில் நகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடத்தில் ஒப்பந்தம் மூலமாக கட்டணமில்லா கழிப்பிடம் கட்டண கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன.

 கட்டணமில்லா கழிப்பிடத்தில் நகராட்சியின் எந்தவிதமான சுத்திகரிப்பும் செய்யப்படாமல் தண்ணீர் வசதியின்றி கழிபிடத்தின் உள்ளே கழிக்கப்படும் கழிவுகள் வெளியேறி பேருந்து வந்து செல்லும் வழித்தடத்தில் தேங்கி துர்நாற்றம் வீசி கொசுக்களின் கூடாரமாக மாறி உள்ளது.

 அதேபோல் கட்டண கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் வெளியேறி கால்வாய் வழியாக திறந்த நிலையில் செல்கின்றன. இதிலிருந்தும் அளவிற்கு அதிகமான துர்நாற்றம் வீசி வருகிறது.

 இதனைத் தொடர்ந்து, தற்பொழுது மழைக்காலம் என்பதால் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் அதிகமாக பரவக்கூடிய  அபாயம் உள்ளது.

 இந்நிலையில் நகராட்சியின் அலட்சிய போக்கால் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கேள்விக்குறியாகியுள்ளது.

 துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தன போக்காக செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே மக்களின் அவா.