பொங்கலை சோகமாக்கிய இரண்டு போலிசாரின் மறைவு!

ஜி.கே.சேகரன்,
இரண்டு போலிசாரின் மறைவு பொங்கல் தினத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் காவலராக பணி புரிந்து வந்தவர் மகேஷ். அவர் இன்று காலை பணிக்கு வந்த அவர் 2 வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தன்வந்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துக் கொண்ட மகேஷ் மன அழுதத்த நோய்க்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது தெரிய வந்திருக்கிறது.
மகேஷ்க்கு பணியில் தான் மன உளச்சல் ஏற்பட்டதாக அவருடன் பணிபுதிபவர்கள் சொல்கிறார். மகேஷிக்கு மனைவி மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் ஸ்ரீ ஹரி மகனும் என்ற உள்ளனர்.
இதே போல், நேற்று குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பாலாஜி என்கின்ற காவலர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேற்படி பாலாஜி காவல் துறை பணியில் சுறுசுறுப்பாகவும் நேர்மையாகவும் துடிப்பாகவும் செயல்படக்கூடியவர்.மேலும் மனிதநேயம் மிக்கவா ஆவார்.
அவரது அகால மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் குடியாத்தம் நகரம் மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா கைவிப்பட்டது.