கேங் ரேப் செய்து வந்த சிறுவர்கள் சிக்கினார்கள்!

ம.பா.கெஜராஜ்,
விருதுநகர் பகுதியில் நடந்த ரேப் சம்பவத்தில் சிறுவர்கள் ஈடுபட்டதை அறிந்து அதிர்ந்த நிலையில், அதற்குள் வேலூரில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வேலூர் காகிதப்பட்டரை மற்றும் சத்துவாச்சாரிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலைக்கு கீழ் சர்வீஸ் லைன் உள்ளது.
இந்த சர்வீஸ் லைனில் நள்ளிரவை கடந்த பின்னர் பல குற்றச் சம்பவங்கள் நடப்பதாக சொல்லப்படுவதுண்டு. குறிப்பாக பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து விரட்டிய சம்பவங்களும் நடந்துள்ளது. அதற்கேற்றவாறு அந்த பகுதி கும்மிருட்டாகவே இருக்கும்.
மேற்படி பகுதியில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்து இதுவரை எவரும் புகார் அளித்தது கிடையாதாம். அதில் இரண்டு விஷயம் உள்ளது, முதலாவதான விஷயம், சம்பவம் குறித்து வெளியில் தெரிந்தால் சமூகத்தில் அவலம் ஏற்படும் என்று ஒதுங்கிக் கொள்கிறனர்.
இரண்டாவதாக எந்த ஸ்டேஷனில் புகார் அளிப்பது என தெரியாமல் காலத்தை கடத்தி பின்னர் அவர்களாகவே சமாதானம் ஆகிவிடுகிறார்கள்.
இதனால் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தங்கள் செயலை தொட்ர்ந்து வந்தனர்.
இந்நிலையில் தான் தற்போது ஒரு குற்றச்செயல் புகாராகி சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளார் எஸ்.ராஜேஷ்கண்ணா இ.கா.ப.அவர்கள் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளா மிர்.
அதில் தெரிவித்திருப்பதாவது,
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இ - மெயிலுக்கு ஒரு புகார் வரப்பெற்றது . அந்த புகாரில் ஒரு பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரும் 17.03.2022 - ஆம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்து விட்டு 18.03.2022 - ஆம் தேதி விடியற்காலை 01.00 மணியளவில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாவும், அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும்,
தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச்சென்றதாகவும், அங்கு வைத்து தங்களிடமிருந்த செல்போன்கள் , பணம் சுமார் ரூ .40,000 / மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும்,
மேலும் அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், எனவே உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார்.
மேற்படி புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . எஸ். ராஜேஷ்கண்ணன் , இ.கா.ப. , அவர்கள் வேலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன் ( பொறுப்பு ) அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலைய குற்ற எண் .127 / 2022 U/S 147 , 148 , 342 , 365 , 368 , 376 ( D ) , 376 (இ ) , 395 , 397 , 506 ( 2 ) IPC r/w 4 of TNPPWH Act ன்- படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டது .
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 எதிரிகளில் , 4 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேற்படி கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வழக்கு சொத்துக்களும் , தடயங்களும் , ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட எதிரிகள் மற்றும் இளஞ்சிறார்கள் உரிய நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்ட எதிரிகளில் இருவர் சட்டத்திற்கு முரண் நடத்தைக்கொண்ட இளஞ்சிறார்களாவர். எனவே சிறார்கள் நீதிப சட்டம் Section 21 of JJ Act ன் படி அவர்களது பெயர், அடை புகைப்படம் போன்ற அடையாளங்களை வெளியிடவோ , பிரசுரம் செய்யவோ கூடாது.
இவ்வழக்கின் புகார்தாரர் தன்னைப்பற்றிய விவரங்களை ரகசியமாக பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்கவும் , பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுவது இந்திய தண்டனை சட்டம் 228A IPC- ன் படி ( அது எந்தவகையான அடையாளமாக இருந்தாலும் ) குற்றமாகும் என்பதாலும் , பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வந்து புகாரளிக்கவும், குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத்தரவும் வழிவகுக்கும் என வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர்.ஜ.ஆனி விஜயா . இ.கா.ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.