அமைச்சரையே மிரட்டிய பைல்வான்கள் சிறையில் அடைப்பு!

அமைச்சரையே மிரட்டிய பைல்வான்கள் சிறையில் அடைப்பு!

 கு.பிரணேஷ்,

 தமிழக அமைச்சர் ஒருவரை இரண்டு பைல்வான்கள் மிரட்டிய சம்பவம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆ.காந்தியின் உதவியாளர் திரு.த.இராஜசேகரன் வயது 62 த/பெ தட்சணாமூர்த்தி அவர்கள் காவேரிப்பாக்கம் காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்த வழக்கின் விவரம் பின் வருமாறு,

 அய்யா நான் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அவர்களின் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். 21.01.2023 -ம் தேதி காலை 10.57 மணிக்கு மாண்புமிகு. கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அவர்கள் சென்னையில் இருந்து காவேரிப்பாக்கத்திடம் வந்து கொண்டிருந்த போது அமைச்சர் அவர்களின் கைப்பேசி எண் 9443222770 என்ற எண்ணிற்கு 9385349498 என்ற எண்ணில் இருந்து மிஸ்டு கால் வந்தது.

  மீண்டும் 11.02 மணிக்கு அதே எண்ணில் அமைச்சர் அவர்களின் கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட நபர் தான் வழக்கறிஞர் வில்சன் பேசுவதாகவும் நீ இராணிப்பேட்டை மாவட்டமா? திமுக எம்.எல்.ஏ.வா , அதிமுக எம்.எல்.ஏ.வா? இராணிப்பேட்டை சாமுவேல் என்னிடம் பணம் வாங்கி விட்டான், உன்னிடம் கேட்டால் எல்லா தகவலும் கிடைக்கும் என்று ஒருமையில் கனத்த குரலுடன் பேசி உள்ளார்.

   அதற்கு அமைச்சர் அவர்கள் நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட போது மீண்டும் அந்த நபர் நான் கேட்கிற டீடெய்லுக்கு -க்கு பதில் சொல்லு என்று அவமதிக்கும் வகையில் ஒருமையில் பேசியுள்ளார்.

   மேற்படி நபர் எங்கிருந்து பேசினார் யார் என்ற உண்மை விவரம் தெரிவிக்க மறுத்துள்ளார். எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் எந்த வித முகாந்திரமும் இன்றி ஒருமையில் பேசிய நபர் மீது சட்ட படி நடவடிக்கை எடுக்குமாறு  அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

  அந்த புகார் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு 1) பாலாஜி(31) த/பெ சுதாகர், நெ.1/12, கண்ணன் நாயுடு தெரு, போலீஸ் குடியிருப்பு அருகில், கொண்டிதோப்பு, சென்னை 2) கோகுல்(25) த/பெ மோகன்ராஜ், நெ.93/62, மேட்டு தெரு, சாத்தாங்காடு, திருவொட்ரியூர், சென்னை என்ற இரு எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.