பல நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்!

பல நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்!

ர.நி.ஆனந்தன்,

  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது                              

பொது மக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

  இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

 மேலும் வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 325 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 பின்னர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு ரூ.27,000/- மதிப்பில் கையால் இயக்ககூடிய மூன்று சக்கர சைக்கிள்கள், 5 நபர்களுக்கு ரூ.85,000/- மதிப்பில் திறன்செயலியுடன் கூடிய கைப்பேசிகள், 10 நபர்களுக்கு ரூ.15,000/- மதிப்பில் கருப்பு கண் கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல், பார்வையற்றோருக்கான கை கடிகாரங்கள் என மொத்தம் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) திரு.வில்சன் இராசசேகர், (வளர்ச்சி) திரு.ஹரிஹரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ஜெயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பாலாஜி, அனைத்து துறை உயர் அலுவலர்கள மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.