ஆண் கருத்தடைக்கு ரூ.5 ஆயிரம் பரிசு! ஆட்சியர் துவக்கிவைத்தார்!

ஆண் கருத்தடைக்கு ரூ.5 ஆயிரம் பரிசு! ஆட்சியர் துவக்கிவைத்தார்!

 ஜி.கே.சேகரன்,

வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை பகுதிகளுக்கு நவீன ஆண்கள் கருத்தடை சிகிச்சை முகாம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்

 வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம் குறித்து சிறப்பு பிரச்சார விழிப்புணர்வு ஊர்தியை வேலூர் மாவட்ட பெ.ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.அவர்கள் துவங்கி வைத்தார்.

   வேலூர் ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இந்த பிரச்சார ஊர்தி செல்கிறது.

   இந்த கருத்தடை அறுவை சிகிச்சை வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகளில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யபடுகிறது.

   இன்று 22.11.2022 முதல் 4-12-2022 வரையில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது இதனை செய்துகொள்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணமும் 25 கிலோ அரிசி மூட்டையும் வழங்கபடுகிறது.

   இந்த நிகழ்ச்சியில் குடும்ப நலம் துணை இயக்குநர்  மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்