புத்துயிர் பெறும் அண்ணாமறுமலர்ச்சி திட்டம்!

த.நெல்சன்,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து கிராம அண்ணா
மறுமலர்ச்சி திட்டம் இரண்டின் -ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆப., அவர்கள்
தலைமையில் நடைப்பெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஆர்த்தி, செயற்பொறியாளர் திரு.செந்தில்
மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் கனவு திட்டமான அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆட்சியாளர்கள் அந்த திட்டத்துக்கு புத்துயிர் ஏற்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.