11,000 காலியான அரசு பணியிடங்கள்! தாட்கோ மூலம் பயிற்சி! கலெக்டர் தகவல்!

ஆர்.ரமேஷ்,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் பேப்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் பல்லேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதற்கான பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் பல்வேறு தேர்விகளுக்கு ((SSC MTS, SSC CGL, SSC CHSL, SSC JE) 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி ஆதிகாரபூர்வ http://ssc.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11,000 காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
இத்தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி Veranda Race நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படவுள்ளது.
இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு ஃ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு முறையானது (1. Computer Based Test> 2. Physical efficiency Test/Physical standard Test (Only for the of Havalder) 3. Document Verification ஆகிய முறைகளில் நடைபெற உள்ளது.
இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000/- முதல் ரூ. 22,000/- வரை பணியமர்த்தபடுவார்கள்.
மேற்கண்ட பயிற்சியில் விண்ணப்பிக்க தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப., அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.