21600 பயனாளிகளுக்கு ரூ.39. 30 கோடி மதிப்பில் சிகிச்சை! வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்!!

21600 பயனாளிகளுக்கு ரூ.39. 30 கோடி மதிப்பில் சிகிச்சை! வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்!!

 ஜி.கே.சேகரன்,

  தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 21600 பயனாளிகள் ரூ.39. 30 கோடி மதிப்பில் சிகிச்சை பெற்றிருப்பதாக வேலூர் ஆட்சியர் தகவல்!!

 அதேபோல் கர்ப்ப காலத்தில், பெண்கள் சத்தான உணவுகளை  உட்கொண்டால் தாய் சேய் இறப்பை தடுக்க முடியும் வேலூரில் சமுதாய வளைகாப்பை துவங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.

  வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ்சமூக நலன் மற்றும் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை இணைந்து,தேசிய ஊட்டச்சத்து மாத விழா முன்னிட்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.பா. அவர்கள் துவக்கி வைத்தார்.

  இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் பெண்கள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு விடுபட்ட சத்தான உணவுப் பொருட்களை மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து அலுவலர்கள் பரிந்துரை செய்யும் பொழுது அதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் பிறக்கும் குழந்தைகள் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

    கர்ப்ப காலத்தில் தாய் சேய்  உயிரிழப்பை தடுக்க முடியும் மேலும் உணவு பொருட்களை சரியான நேரத்தில் சரிவிகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

   குறிப்பாக ராகி உள்ளிட்ட தானிய வகை உணவுகளையும் நாட்டு வகை வகை பழங்களையும்,சத்தான காய்களையும் எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.மருத்துவர்கள் அவ்வப்போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும்.

   தமிழக அரசு பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது, அதில் ஒரு திட்டம் தான் சமுதாய வளைகாப்பு திட்டம்.

   மேலும் தமிழக அரசு பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் மேலும் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

 முதலமைச்சர் விரிவான மருத்துவகாப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்

   வேலூர் மாவட்டத்தில் 21600 பேருக்கு முதல்வர் மற்றும் பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டம் மூலம் ரூ.39.30 கோடியில் மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது  - வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவகாப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் 4 ஆம் ஆண்டு விழாவில் பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசுகள் சான்றுகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசினார்.

 ஆட்சியர் தலைமையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இதன் நான்காம் ஆண்டு விழாவில், அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் சான்றுகளை வழங்கினார். இம்மாவட்டத்தில் மொத்தம் 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 15 தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டம் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்படு வருகிறது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 21600 பயனாளிகளுக்கு ரூ.39. 30 கோடி மதிப்பில்  மக்கள் சிகிச்சைக்காக இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது  

 இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் அரசு பள்ளியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு சலுகைகள் அரசு பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கபடுகிறது கிராம நகர மாநகரங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனைவருக்கும் மருத்துவம் சென்று சேர்வதில் உறுதியாக உள்ளோம்.

   அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைகள் பெற சாத்திய கூறில்லை என்றால் தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சையை பெற்றுகொள்ளலாம். இதுவரையில் 21600 பேர் ரூ,39.30 கோடியில் சிகிச்சையை பெற்றனர் மேலும் விபத்து நேர்ந்தால் சிஎம்.சி மருத்துவமனையிலும் தனி பிரிவு துவங்கப்பட்டு அவர்களை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 இத்திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பேசினார்.

 இவ்விழாவில் மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் ஆனந்தராஜ்,மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் அலுவலர் கண்ணகி உள்ளிட்டோரும் மாணவ,மாணவிகளும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.