ஸ்டிரைக்கினால் பெரிதளவு பாதிப்பு இல்லை!

ஸ்டிரைக்கினால் பெரிதளவு பாதிப்பு இல்லை!

ஜி.கே.சேகரன்,

 வேலூரில்  அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் - வேலூர் மாவட்டத்தில் 90 சதவிகித பேருந்துகள் இயக்கபடுகிறது.

 வேலூர் மாவட்டம்  போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 19-ம் தேதி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. அதற்கடுத்த நாளே அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

  இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜன.9-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன.

   வேலை நிறுத்தத்தை தவிர்க்க அமைச்சர் சிவசங்கர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இது தொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால் பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது அதிலும் பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு இல்லாமல் தோல்வி அடைந்தது.

  ஆகவே, பாட்டாளி மக்கள் தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கம்  சார்பில் பேருந்து தொழிலாளர்களின் சார்பில் வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்னன.

  இதனால் திட்டமிட்டபடி இன்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

     வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் பணிமனை கிருஷ்ணா நகர் பணிமனைகளில் சிறிதளவு பேருந்துகளே நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் நிலையங்களில் வழக்கம் போல்பேருந்துகள் இயக்கபடுகிறது ஆந்திர மாநில பேருந்துகளும் பக்தர்களை ஏற்றி செல்கிறது இதனால் வேலூர் மாவட்டத்தில் 90 சதவிகிதம் பேருந்துகள் இயக்கபடுவதால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.