யோகா குறித்த மூன்றாவது தேசிய பயிலரங்கு கூட்டம்!

G.Balaguru,
திருவாரூரில் யோகா குறித்த மூன்றாவது தேசிய பயிலரங்கு கூட்டம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
பெங்களூரு யோகா அறிவியல் மையத்தின் நிதி உதவியுடன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறையை சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் நூலகர் முனைவர் ஆர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார்
அப்போது அவர் பேசும்போது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் அத்தியாவசியத்திற்கு யோகாவினுடைய அணுகுமுறை மற்றும் பயிற்சி முறையை இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு செய்வது என்று எடுத்துரைத்தார்
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறையின் மேனாள் பதிவாளர் முனைவர் ஆர். இளங்கோவன் பங்கேற்று யோகா மற்றும் அதன் அறிவில் அடிப்படையை பற்றி பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டு இறுதியாக மாணவர்களுக்கான சில யோகநித்ரா என்ற முறையினை விளக்கி கூறினார்.
கல்வி புல மேலாளர் பேராசிரியர் பி சீனிவாசன் அவர்கள் விழாவினில் கலந்துகொண்டு சிறப்பு செய்யும்போது யோகாவினுடைய தற்கால அத்தியாவசியத்தை பற்றி எடுத்துக் கூறினார்.
இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை தலைவர் பேராசிரியர் த. மணியழகு அவர்கள் பங்கேற்பார்களை வரவேற்றும் இறுதியாக இணை பேராசிரியர் முனைவர் எஸ். ஜெயராமன் பங்கேற்பாளர்களுக்கு நன்றி கூறினார். நிகழ்ச்சியானது இறுதியில் நாட்டுப்பண்ணோடு முடிவு பெற்றது.