செருப்பை கழற்றி அடிப்பேன் எனக் கூறிய சீமானும் ஆர்.எஸ்.எஸ்.ம் ஒன்று தான்! திமுக வின் ராஜீவ்காந்தி ட்விட்!

செருப்பை கழற்றி அடிப்பேன் எனக் கூறிய சீமானும் ஆர்.எஸ்.எஸ்.ம் ஒன்று தான்! திமுக வின் ராஜீவ்காந்தி ட்விட்!

 ம.பா.கெஜராஜ்,

கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களையும் சிறுபான்மையினர்மெனக்கூறினால் செருப்பை கழற்றி அடிப்பேன் எனக் கூறிய சீமானை, சங்கி மற்றும் தற்குறி என திமுகவின் ராஜீவ் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 மணிப்பூரில் நடந்து வரும்¢ கலவரம் தொடர்பாக கடந்த 30-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, "இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள்" என சீமான் பேசினார்.

 திமுகவையும், காங்கிரஸையும் ஆதரிப்பதால் அவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என அவர் குறிப்பிட்டார். சீமானின் இந்த பேச்சு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. சீமானின் அடாவடி பேச்சைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 இதையடுத்து, தனது கருத்துக்கு விளக்கம் தருகிறேன் என்ற பெயரில் சீமான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பும் பெரும் சர்ச்சையானது. அதில் பேசிய சீமான், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் கிடையாது என குண்டை தூக்கிப் போட்டார்.

 மொழி அடிப்படையில் அவர்கள் பெரும்பான்மையினர் என்றும், இனி யாராவது இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் எனக் கூறினால் செருப்பை கழட்டி அடிப்பேன்" எனத் தெரிவித்தார்.

 சீமானின் இந்தப் பேச்சுக்கும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி சீமான் பேச்சை மையப்படுத்தி ட்வீட் போட்டிருக்கிறார்.

  சிறுபான்மை மக்களின் உரிமையை தட்டி பறிக்க பார்க்கும் தற்குறி சங்கீ சீமானே? இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறுபான்மை என்கிற சட்ட பாதுகாப்பினை அண்ணல் அம்பேத்கர், ஆசாத், காயிதே மில்லத் என பல பேர் வாதாடி, போராடித்தான் பெற்றுத் தந்தனர். சீமான் போன்ற தற்குறிகள் தங்களின் சினிமா வசனம் என நினைத்து தன் வயிற்று பிழைப்புக்காக சட்ட பாதுகாப்பு மற்றும் உரிமைகளை நீர்த்து போக செய்கின்றனர்.

 இந்திய அரசியல் சட்டத்தில் மதத்தால் சிறுபான்மை என்கிற சிறப்பு சட்ட பிரிவினை நீக்க வேண்டும் என்றும், சிறுபான்மை என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் அதிகப்படியான உரிமைகளை அனுபவிக்கின்றனர் எனவும் ஆர்.எஸ்.எஸ். என்கிற மத அடிப்படைவாத அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

 சிறுபான்மை என்கிற வார்த்தை அரசியல் சட்டத்தில் கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸின் வாதம் அதே வாதத்தை தான் இன்று சீமானும் முன்வைக்கிறார்! சீமானும் ஆ£.¢எஸ்.எஸ்.ம் ஒன்று தான்! என தனது பதிவில் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.