உயர் போலிஸ் அதிகாரிகளின் உத்தரவை புறம் தள்ளிய அரியூர் இன்ஸ்பெக்டர்! அலைக்கழிக்கப்பட்ட அப்பாவி பெண்!

 உயர் போலிஸ் அதிகாரிகளின் உத்தரவை புறம் தள்ளிய அரியூர் இன்ஸ்பெக்டர்! அலைக்கழிக்கப்பட்ட அப்பாவி பெண்!

உ.சசிக்குமார்,

 எஸ்.பி.யிடம் புகார் கொடுத்த அப்பாவி பெண்ணை அரியூர் காவல் நிலைய எஸ். ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மனிதாபிமானமே இல்லாமல் அலைக்கழித்து மிரட்டி, விரட்டியிருக்கிறார்கள்.

 திவ்யபாரதி என்கிற பெண், கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதி ஆன்டர்சன் பேட்டையில் வசிக்கிறார். கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உள்ள அவருக்கு சொந்த ஊர் வேலூர் சாயிநதபுரம் ஆகும். அவருடைய தந்தை அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார்.

 இந்நிலையில் திவ்யபாரதி கடந்த 24.07.2023 ஆம் தேதியன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

  அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் மீது அளித்த அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, எனது தாய் வழி பாட்டிக்கு சொந்தமான வீடு வேலூர், சாயிநாதபுரம், லட்சுமண முதலியார் தெருவில் இருந்தது. அந்த வீட்டை என் பாட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு விற்பனை செய்து பணத்தை பேத்திகளான எனக்கும் என்னுடைய அக்கா தங்கை மூவருக்கும் கொடுப்பது என முடிவு செய்து, அதன்படி சகோதரிகளுக்கு பணத்தை கொடுத்துவிட்டனர். அரியூரில் ஒரு காலிமனையை பாட்டியின் பெயரில் கிரையம் பெற்று, அதே மனையை எனது பெயருக்கு உயில் எழுதினார்.

  கிரைய பத்திரத்தையும், உயில் பத்திரத்தையும் என் பெற்றோர் வைத்துக்கொண்டர்.

 "என் பாட்டி எனக்கு எழுதிக்கொடுத்திருக்கும் உயிலில் என்னுடைய ஆயுளுக்கு பிறகு சொத்தை திவ்யபாரதிக்கு (எனக்கு) மட்டும் பாத்தியம். என்னுடைய இதர வாரிசுகள் வேறு யாருக்கும் எந்தவிதமான உரிமையும் இல்லை. இந்த உயில் சாசனம் என்னுடைய ஆயுளுக்கு பிறகு அமுலுக்கு வர வேண்டியது என குறிப்பிட்டுள்ளார்".

    எனது பாட்டி கடந்த 06.08.2022 ஆம் தேதி இறந்துவிட்டார். மேற்படி எனக்கு எனது பாட்டி கொடுத்த காலிமனைக்கான அசல் பத்திரம் மற்றும் அதே சொத்தின் உயில் பத்திரத்தின் அசல் யாவற்றையும் எனது பெற்றோர் என்னிடம் ஒப்படைக்காமல் அவர்களே வைத்துக்கொண்டனர்.

  பாட்டி வீடு விற்ற வகையில் கிடைத்த மொத்த பணத்தில், மீதம் ரூ.10 லட்சம் என் பெற்றோரிடமே உள்ளது. அந்த பணத்தில் என்னுடைய மனையில் சிக்கனமாக வீடு கட்டி கொடுப்பதாக என் தந்தையும், தாயும் என்னிடம் ஆசை வார்த்தை சொன்னார்கள். எனது பெற்றோர் தானே என்று நம்பிய நான் வீடு கட்டி கொடுப்பார்கள் என கடந்த ஓராண்டாக காத்திருந்தேன். இடையே பலமுறை என் தந்தையிடம் வீடு கட்டிகொடுக்க கேட்டபோது, இன்னும் கொஞ்ச நாள் பொறு என்று காலம் தாழ்த்தி வருகிறார்.

    எனக்கு என் பாட்டி கொடுத்த சொத்து பத்திரங்களை என்னிடம் கொடுக்காமலும், சொன்னபடி வீடு கட்டிக்கொடுக்காமலும் ஏமாற்றும் நோக்கோடு செயல்படுகிறார்கள் என்பதை பின்னர் புரிந்து கொண்டேன். நான் வாழ்க்கை பெற்று சென்ற என் கணவரின் ஊரான கே.ஜி.எப்பில் மனை வாங்கி வீடுகட்டலாம் என்று முடிவெத்து, எனக்கு என் பாட்டி அளித்த மனையை விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்து அசல் பத்திரத்தை என் பெற்றோரிடம் கேட்டேன், அவர்கள் தர மறுக்கிறார்கள். 23/07.2023 ஆம் தேதி பிற்பகல் சுமார் 2.30.மணி அளவில் நான் என் பிள்ளை மற்றும் கணவருடன் கே.ஜி.எப்.பிலிருந்து வேலூருக்கு வந்து என் பெற்றோர் வீட்டுக்கு சென்று அங்கிருந்த என் தாயிடம் எனது அசல் பத்திரங்களை கேட்டேன்.

 அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொன்ன அவர் என் தந்தைக்கு போன் செய்து அவரை வரவைத்தார். எனது தந்தை வந்ததும், இங்கிருந்து போய்விடு இனிமேல் பத்திரம் கேட்டு வந்தால் உன்னை ஒழித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்து எங்களை விரட்டினார்.

 என் பாட்டி எனக்கு கொடுத்த சொத்து பத்திரங்களை கொடுவில்லை என்றால், போலிசில் புகார் செய்வேன் என்று சொல்லி என் பெற்றோரிடம் அழுதேன், அதற்கு அவர் நான் அரசியல்வாதி நீ புகார் கொடுத்து என்னை ஒன்றும் செய்துவிட முடியாது, உன்னுடைய பத்திரங்கள் என்னிடம் தான் உள்ளது, நீ எல்லாவற்றையும் விட்டுவிட்டு பழைய திவ்யாவாக எங்களிடம் வந்து இங்கேயே இரு, உன் மனையில் வீடுகட்டி கொடுத்து பத்திரத்தையும் கொடுக்கிறேன், இல்லைன்னா இங்கிருந்து ஓடிவிடு என்று என் கணவரிடமிருந்து என்னை பிரிக்கும் நோக்கத்துடன் என்னை மிரட்டினார்.

 அய்யா, அவர்கள் எனக்கு என் பாட்டி கொடுத்த சொத்து பத்திரங்கள் மற்றும் எனக்கு சேர வேண்டிய என் பாட்டியின் பணத்தையும் என் பெற்றோர்களிடமிருந்து பெற்று கொடுப்பதுடன், வீடு கட்டிதருகிறேன் என்று சொல்லி ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றியது என்னை ஒழித்து விடுவேன் என மிரட்டியது குறித்தும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என புகாரில் தெரிவித்திருந்தார்.

 இந்த புகார் தொடர்பாக அரியூர் காவல் நிலைய எஸ்.ஐ.குமரன் என்பவர் திவ்யபாரதியையும், அவரது தந்தையையும் அழைத்து விசாரித்த போது, அவரது தந்தை பத்திரங்கள் அனைத்தையும் கொடுத்து விடுவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் பத்திரம் இல்லை காணாமல் போய்விட்டது என்று பொய் சொல்லி நழுவியுள்ளார். ஆகவே ஏம்மா உனக்கு பத்திரம் கிடைக்காது எழுதிக் கொடுத்துவிட்டு போ என்று எஸ். ஐ. குமரன் புகார்தாரரை கட்டாயப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் பலதடவை அலைக்கழித்த எஸ்.ஐ.குமரன் புகார் தாரரை அவமானப்படுத்தும் வகையில் நடத்தியிருக்கிறார்.

 ஆகவே புகார்தாரரான திவ்யபாரதி, அரியூர் ஸ்டேஷனில் தனக்கு ஏற்பட்ட அநீதிகுறித்து டிஜஜி அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 அதன் பின்னர் அரியூர் ஸ்டேஷனுக்கு பதறிக்கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு திவ்யபாரதியை அழைத்து விசாரித்து, வழக்கு போட முடியாது, நீ எங்கு வேண்டுமானாலும் சொல்லிக்கொள். ஒழுங்கா எழுதி கொடுத்துவிட்டு போ என்று கூறி வற்புறுத்தியுள்ளார்.

 அதன் பின்னர் திவ்யாவின் தந்தையை ஸ்டேஷனுக்கு வரவழைத்த இன்ஸ்பெக்டர், அவரிடம் எழுதி பெற்றுக் கொண்டு பதிரமாக வழியனுப்பிவைத்தவிட்டு அவரும் புறப்பட்டு சென்றுவிட்டார்,

 இடையே வெங்கடேசன் என்கிற எஸ் .ஐ ஸ்டேஷனுக்கு வந்து புகார்தாரர் திவ்யாவை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளு என்று அங்கிருந்த பெண் போலிஸிடம் சவுண்டு விட்டுள்ளார்.

 மாலை ஏழுமணி வரை இந்த களேபரம் நடந்ததே தவிர புகாருக்கான நியாயமான பரிகாரத்தை அரியூர் போலிசார் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் திவ்யபாரதி அழுதுக்கொண்டே ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

  இந்த சங்கதிகள் குறித்து ஸ்டேஷனில் உள்ள ஆதாரங்கள் அடிப்பையில் உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுத்தால் நலம்.

 குறிப்பு:-புகார்தாரர் திவ்யபாரதியை அலைகழித்த அரியூர் போலிசார், அரசியல் கட்சியினர் சிலர் அங்கு வேறு ஒரு கட்டபஞ்சாயத்துக்காக திரண்டு வந்தபோது, அவர்களுக்கு சேர் எல்லாம் போட்டு காபி டீ வாங்கிக்கொடுத்து பஞ்சாயத்தை நல்லபடியாக நடத்தினர்.

சூப்பரு!?