தி.மு.க.அலுவகம் டு திருப்பதி! தினமும் இலவச தரிசன பயணம்! எம்.எல்.ஏ.நந்தகுமார் ஏற்பாடு!

 

ம.பா.கெஜராஜ்,

  திமுகவுக்கும் இந்து கடவுள்களுக்கும் ரொம்பவே தூரம் என்று தொடர் விமர்சனங்கள் எழுந்துக் கொண்டிக்கும் நிலையில்திமுக அலுவலகம் டு திருப்பதி திருமலை என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு நிகழ்வு விளம்பரம் இல்லாமல் செயல்பாட்டில் உள்ளது.

 வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரான ஏ.பி.நந்தகுமார் தான் இந்த ஸ்கீமுக்கு சொந்தக்காரார்.

  இது பற்றின விவரம் வருமாறு,

  திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்ய வழிவகை இல்லாத ஏழை குடும்பத்தினரை தேர்வு செய்து அவர்களை தனது சொந்த செலவில் திருப்பதி திருமலைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார் மேற்படி சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்.

 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் பதவி நந்தகுமாருக்கு அளிக்கப்பட்டது. அதன் மூலம் தமது மாவட்டத்துக்கு என்ன செய்யமுடியும் என்று யோசித்து இந்த திட்டத்தை அவர் அமுலுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

 அந்த வகையில்,வேலூர் மையப்பகுதியில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்திலிருந்து திருப்பதிக்கு தினமும் ஒரு வேன் புறப்படுகிறது, அந்த வேனில் 12 பேர் அமரலாம்.

   பயணாளிகள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை மாவட்ட கழக அலுவலகத்தில் அளித்து பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

 அதனடிப்படையில் அவர்களது பின்புலத்தை விசாரித்து பக்தர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

 அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களை திருப்பதி சாமிதரிசனம் செய்ய இலவச பயணம் மற்றும் இலவச சேவை உணவு ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

 இந்த இலவச பக்தி பயணமானது வாரம் ஆறு நாட்களில் செயல்படுத்தப்படுகிறது. முன்பதிவு செய்த பின்னர் குறைந்த பட்சம் நான்கு நாட்களில் பயணிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தினமும் காலை ஏழு முப்பது மணிக்கு வாகனம் புறப்படுகிறது.

   பயணாளிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.300 தரிசன கட்டணத்தை அறங்காவல் குழு உறுப்பினர் நந்தகுமார் தனது சொந்த செலவில் செலுத்தி, அவர்களுக்கு சாமிதரிசனம் செய்யவைத்து, இலவசமாக உணவு வழங்கி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வந்து மாலை வேலூர் திமுக மாவட்ட கழக அலுவலகத்துக்கு அழைத்து வந்து சேர்த்துவிடுகின்றனர்.

  இந்நிலையில் இன்று காலை புறப்பட்ட இலவச தரிசன வாகனத்தை மேற்படி நந்தகுமார் அவர்கள் வழியனுப்பொவைத்தார்.

  அப்போது அவர் தெரிவிக்கையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை மக்கள் யார் வேண்டுமானாலும் இதன் மூலம் இலவசமாக திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய முடியும்.

 ஏழை மக்கள் இந்த சேவையை பயன்படுத்திகொள்ள வேண்டுமென. வசதி படைத்தவர்களுக்கு இந்த திட்டத்தில் வாய்பு இல்லை என்று சொன்னார்.