ஒ.பி.எஸ்.க்கு பின்னால் மன்னார்குடி கம்பெனி உள்ளது!முன்னாள் அமைச்சர் வீரமணி கண்டுபிடிப்பு!

ஒ.பி.எஸ்.க்கு பின்னால் மன்னார்குடி கம்பெனி உள்ளது!முன்னாள் அமைச்சர் வீரமணி கண்டுபிடிப்பு!

  ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக மாவட்ட அலுவலகத்தில்  முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

  அந்த கூட்டத்துக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இயக்கத்தை வழிநடத்த கழக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   பழனிச்சாமி தான் அதிமுகவை வழிநடத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

 ஒ.பி.எஸ்.க்கு பின்னால் மன்னார் குடி கம்பெனி உள்ளது அதைப்பற்றி முழுமையாக தெரியவில்லை ஆனால் ஆங்காங்கே சொல்ல கூடிய கருத்து அது தான்.

  திமுக சதிதிட்டம் தீட்டி அதிமுகவை பிளவுப்படுத்த நினைக்கின்றனர் பலர் இரட்டை இலையை முடக்க முயற்சி செய்தனர் ஆனால் அது நடக்கவில்லை.

  ஒபிஎஸ் கட்சி தொண்டர்களின் எதிர்ப்பை சம்பாதிகிறார்.

 அவர் மகன் ஸ்டாலினை சந்தித்துவிட்டு திமுக நல்லாட்சி நடத்துவதாக கூறுகிறார் நாங்கள் உணர்ச்சி வசப்பட்டு பொங்கி எழுந்துள்ளோம்.

  கட்சி ஒற்றை தலைமை எடப்பாடி பழனி சாமி ஏற்க வேண்டும் அவருக்கு 99 சதவிகிதம் ஆதரவு உள்ளது``எடப்பாடியார் தான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்றார்.