சரியாக பணிக்கு வராத மருத்துவர்கள்:- பணியிலிருந்து நீக்க நடவடிக்கை என அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!!

கு.அசோக்,
பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விளங்காமல் செய்ய வேண்டுமென மருத்துவர் பாடுபடுகின்றனர் அவர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என பல முறை புகார்கள் வந்துள்ளது நானும் எச்சரித்தேன் இனியும் அது போன்று தொடர்ந்தால் அவர்களை பணியை விட்டுநீக்க நடவடிக்கை எடுக்கபடும் அமைச்சர் துரைமுருகன் பேச்சு - பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அமைச்சரை நேரில் அழைத்து சென்று திடீர் ஆய்வு.
வேலூர்மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விண்ணம்பள்ளி, வள்ளிமலை,பொன்னை ஆகிய அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அப்போது பொன்னை அரசு ஆண்கள் பள்ளியில் மிதிவண்டியை வழங்கி அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், பொன்னை அரசு ஆரம்பசுகாதார நிலையில் தூய்மையற்ற நிலையில் இருக்கிறது மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
புகார்களும் பலமுறை வந்தது நானும் எச்சரித்தேன் நான் யாரையும் அதிகாரிகளை பழிவாங்குவது கிடையாது ஆனால் இப்பிரச்சணையால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் எனவே மருத்துவர்கள் இனியும் சரியாக நடக்கவில்லை என்றால் நான் சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி அவர்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுப்பேன்.
மருத்துவர்கள் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விளங்காமல் செய்ய பாடுபடுகின்றனர் இதனை அவர்கள் மாற்றிகொள்ள வேண்டும் என பேசினார்
இதன் பின்னர் பொன்னை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தை அமைச்சர் துரைமுருகனை அழைத்துகொண்டு சென்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
அப்போது ஒரு சில அறைகள் திறக்கப்படாமலும் சரியாக பராமரிக்கப்படாமலும் இருந்தது அதனை சரி செய்ய உத்தரவிட்டார் அப்போது பணியில் ஒரே ஒரு பெண் மருத்துவர் மட்டும் இருந்தார் மற்றவர்கள் மருத்துவர்கள் எங்கே என கேட்ட ஆட்சியர் பின்னர் ஆய்வகத்தையும் ஆய்வு செய்து அதனை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
முன்னதாக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் அத்திகடவு அவினாசி திட்டம் தாமதமாக நடப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் கூறியுள்ளார் அவருக்கு நான் தெரிவிக்கிறேன் சரபங்கா திட்டமானாலும் அத்திகடவு அவினாசி திட்டமானலும் எங்காவது ஒரு இடத்திலாவது நீரை கொடுத்தாரா பெயருக்கு பணத்தை செலவு செய்தனர் ஆனால் உருப்படியான காரியத்தை செய்யவில்லை அதிமுக ஆட்சியில் அதே போல் அதிமுக ஆட்சியில் அவர்கள் இந்த திட்டங்களுக்காக நில ஆர்ஜிதமே செய்யவில்லை என அமைச்சர் கூறினார்.