குளிக்கும் பெண்களை படம் பிடித்த சிறுவன் கைது!

ஜான்.மரிய ஜோசப்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே குளித்துக் கொண்டிருந்த பெண்ணை சிறுவன் படம் பிடித்து சிக்கியிருக்கிறார்.
இது பற்றின விவரம் வருமாறு,
மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையை சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அவர் சம்பவத்தன்று அந்த பெண் வீட்டில் உள்ள குளியலறை குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது குளியல் அறைக்கு வெளியில் இருந்து ஒரு சத்தம் வந்தது. சத்தம் வந்த இடம் நோக்கி பெண் சென்றார். அப்போது அங்கிருந்து வாலிபர் ஒருவர் ஓடுவதை பார்த்ததும் இளம்பெண் அதிர்ச்சியானார்.
இது தொடர்பாக தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் 2 பேரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தான் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது செல்போனை வாங்கி பார்த்தனர். அதில் பல்வேறு பெண்களை தகாத முறையில் வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
எல்லாம் செல்போன் படுத்தும் பாடு.