கணவன் மனைவி தகறாறு:- கர்நாடகா போலிஸ் அடித்ததால் வாலிபர் தற்கொலை!

கணவன் மனைவி தகறாறு:- கர்நாடகா போலிஸ் அடித்ததால் வாலிபர் தற்கொலை!

  ஜி.கே.சேகரன், 

 மனைவியிடம் ஏற்பட்ட குடும்ப தகராரு காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார்(38) இவர் சோளிங்கரில் உள்ள தனியார் நிறுவனத்தில்  பனியாளார்களை ஏற்றிசெல்லும் பேருந்தை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வருகிறார்.

 இந்நிலையில் இவருக்கும் பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த கண்ணியப்பன் என்பவருடைய மகள் தீபாவிற்க்கும் கடந்த 5-ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

 இவர்களுக்கு 4-வயதில் தனுஷ்கா என்ற மகளும் ஒன்றரை வயதில் ராகேஷ் என்ற மகனும் உள்ளனர்.

 இந்நிலையில்  இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் உள்ள தாய்வீட்டிற்க்கு சென்ற தீபா இதுவரை கணவர் வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.

 இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக கடந்த ஜீன் மாதம் 8-ம் தேதி பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் சென்றுள்ளார்.

 இந்நிலையில் மனைவி தீபா மற்றும் தீபா குடும்பத்தினர் ஜெயக்குமார் மீது கிருஷ்ணராஜபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. 

 இதனால் பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் காவல்துறயினர் ஜெயகுமாரை காவல் நிலையம் அழைத்து விசாரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் முழங்கால் பகுதி,வலது கால் முட்டி பகுதியில் பலத்த காயங்களுடனும் உடலில் ஆங்காங்கே தடியால் அடித்ததற்கான தழும்புகளுடன்  கடந்த ஜீன் மாதம் 9-ம் தேதி மீண்டும் வீடு திருப்பியுள்ளார்.

 இதனால் இங்கு தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் மன உலைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு  இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் தனது படுக்கைஅறையில் இருந்த மின் விசிரியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 இது குறித்து ஜெயகுமாரின் தாய் அம்மசா அம்மாள்(58) கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த பாணாவரம் காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.