அதிமுக பிரமுகரின் வீடு தரைமட்டம்! குடும்பமே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு!!

அதிமுக பிரமுகரின் வீடு தரைமட்டம்! குடும்பமே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு!!

  கு.அசோக்,

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு  17 வது வார்டியில் வசித்து வருபவர் பல்லவன், இவர் அதிமுக நகர எம்ஜிஆர் மன்றம் செயலாளராக உள்ளார்.

இவர் குடும்பத்துடன் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள அரசு பொறம்போக்கு இடத்தில் கடந்த 60 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறார்.

 இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் நகராட்சிக்கு சொந்தமான இடம் என கூறி கடந்த 24 ஆம் தேதி இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

 ஆனால் கால அவகாசம் இருக்கும் நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது நகராட்சி ஊழியர்களை கொண்டு ஜேசிபி மூலம் வீட்டை இடித்து தரைமட்டம் செய்துள்ளனர்.

அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10லட்சம் ரூபாய் காணவில்லை என கூறப்படுகிறது.

தங்களக்கு நியாயம் வேண்டியும்,நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வீட்டின் முன்பு குடும்பமே மண்ணெண்ய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர்.

 அப்போது திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம் அவர்களை தடுத்து நிறுத்தினார்.நான் இங்குதான் 50 வருடங்களாக வாழ்ந்தேன்.சாகும்வரை இங்குதான் இருப்பேன் என்று பல்லவனின் பாட்டி கதறினார்.

 60ஆண்டு காலமாக குடியிருக்கும் வீட்டை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீட்டை  இடித்து தரைமட்டம் செய்து குடும்பமே தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.