கவிழ்ந்த லாரியை மீட்ட கலெக்டர்!

ஜி.கே.சேகரன்,
காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியை அசம்பாவிதம் ஏற்படாமல் முன்னின்று மீட்ட மாவட்ட ஆட்சியர்.
இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (68). இவர் தன்க்கு சொந்தமான இரண்டு பசுமாட்டை, அதே பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மேய்த்துவிட்டு வீட்டிற்கு திரும்ப ஓட்டி வந்துள்ளார்.
அப்போது கொண்டாபுரம் கால்நடை மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.அப்போது சென்னையில் இருந்து ராணிப்பேட்டை சிப்காட் நோக்கி பெட்ரோல், மற்றும் டீசல், ஏற்றி வந்த டேங்கர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பசுமாட்டின் மீது மோதி, தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.
இதில் டேங்கர், லாரியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் வெளியே ஏறி தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது.அப்போது தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சுப்பிரமணி, காயமடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த விபத்தில் பசுமாடு பலியானது.
அதன் உரிமையாளர் சுந்தரம் என்பவர் லேசான காயத்துடன் தப்பினனார்.
இந்நிலையில் இத்தகவல் அறிந்த இராணிப்பேட்டை தீயணைப்பு போக்குவரத்து நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையில் ஆறுபேர் கொண்ட குழுவினர், சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இந்நிலையில் சாலையில் ஓடிய பெட்ரோல் பிடிக்க வாட்டர் கேன்கலுடன் வந்த பொதுமக்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
இச்சம்பவத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பரப்பரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் வண்ணம் விபத்துக்குள்ளான வாகனத்தை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கும் வகையில் பணிகளை முன்னின்று மேற்கொண்டார்.