குவிந்து கூவிய தூய்மைபணியாளர்கள்!

ஜி.கே.சேகரன்,
ஆட்சியர் அலுவலக எதிரில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆப்பரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஊராட்சி மேனிர் தேக்க தொட்டி பம்பு ஆப்ரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மாநில சங்கத்தின் சார்பில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் தலைமையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டமானது நடைபெற்றது,
ஊராட்சியில் பணிபுரியும் பவர் பம்பை இயக்குபவர்களுக்கு அரசாணைகள் 15, 99, 71, 77, 5 ஆகிய அரசாணைகளின் படி ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், அதே போன்று ஊராட்சி பொது நிதியில் ஊதியம் பெறும் ஓஎச்டி ஆபரேட்டர்கள் குழு காப்பீடு அரசு தலைப்பில் செலுத்த வேண்டும், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த சீருடைகள் மற்றும் வழங்க வேண்டிய பொங்கல் போனஸ் வழங்காததை ஊராட்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதம் இருமுறை மேனிர் தேக்க தொட்டியை சுத்தம் செய்வதற்கான கூலி வழங்க வேண்டும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி வருடத்திற்கு இருமுறை அகவிலைப்படி வழங்க வேண்டும்.
நிலுவைத் தொகை வழங்க வேண்டும் தூய்மை காவலர்களுக்கு பணிப்பதிவு எடுத்தவங்க பிரதி மாதம் ஐந்தாம் தேதிக்குள் நேரடியாக ஊராட்சி மூலம் வழங்கவும், எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்ற கோரி இந்த ஆர்ப்பாட்டமான நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் வீராசாமி கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.அப்போது திரளான பவர் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் பங்கேற்று கோரிக்கையில் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.