மூன்று நாளில் மூன்று பெண் இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்! டிஐஜி அதிரடி!

ம.பா.கெஜராஜ்,
கடந்த மூன்று நாட்களில் மூன்று பெண் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
வாணியம்பாடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கிழவர்கள் கற்பழித்த வழக்கில் பணம் பேரத்துக்கு வழிவகுத்துள்ளார் இன்ஸ்பெக்டர் சாந்தி. ஆகவே அவர் பணியாற்றிக் கொண்டிருந்த வாணியம்பாடி மகளிர் காவல் நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் உள்ளார் அவர்.
வாணியம்பாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்
இவர் தனது ஆண் நண்பர் சொல்படி காவல் நிலையத்தை வழிநடத்தி வந்ததாகவும், ஒரு பெண் அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையிலும் இவரையும் காத்திருப்பு பட்டியலில் வைத்துல்ளது காவல் துறை.
உமராபாத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் யுவராணி
ஆம்பூரை அடுத்த¢ உமராபாத் பெண் காவல் ஆய்வாளா யுவராணியும்¢ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி எம். எஸ். முத்துசாமி, இ.கா.ப. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்தம்மா மீது சட்டவிரோத செயல்களை தடுக்க தவறியதாக குற்றச்சாட்டு பல உள்ளது. குறிப்பாக பெண் காவல் ஆய்வாளர் யுவராணி மணல் கொள்ளை, கள்ள சாராயம் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க தவறியதாக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அவர்களுக்கு புகார்கள் பறந்தன.
இது குறித்து இன்ஸ்பெடர் யுவராணி கண்காணிக்கப்பட்டார். அதில் புகார்கள் உண்மையென தெரியவந்தது. அப்படியிருக்க காவல் ஆய்வாளர் யுவராணியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்ய வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.