பசித்தவருக்கு உணவு திட்டத்துக்கு முட்டுக்கட்டை! டீனா டானா என்று ஏழைகள் கேள்வி!
பா.சுரேஷ்,
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பசித்தவருக்கு உணவு குழு சார்பில் வழங்கிவந்த பொதுமக்களுக்கான இலவச உணவு திடீர் நிறுத்தம். மருத்துவமனை டீன் அடாவடி.! மீண்டும் அனுமதி தராவிட்டால் பசித்தவருக்கு உணவு குழுவினை திரட்டி மருத்துவமனை கேட் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கை!
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனையில், நூற்றுக்கு மேற்பட்டோர் அதிலும் குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளியோர் நாள்தோறும் மருத்துவ சிகிச்சைக்காக வந்தவண்ணம் உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனை சார்பில் உணவு வழங்கப்படுகிறது. ஆனால் உடன்வரும் உதவியாளர்கள் கையில் பணம் இல்லாமல் உணவு சாப்பிட முடியாமல் தவிக்கும் அவளநிலை உள்ளது.
இதனை தொடர்ந்து பசித்தவருக்கு உணவு வழங்கும் குழுவினருக்கு பொதுமக்களின் சார்பில் இலவச உணவு வழங்க கோரிக்கை முன்வைத்ததின் பேரில் கடந்த 2019 கொரோனா உயிர்கொல்லி நோய் உச்சத்தில் இருக்கும் நிலையில் மேற்கண்ட குழு சார்பில் காலை சிற்றுண்டி தொடங்கி மதியம் உணவு வரை அரசு மருத்துவமனை வளாகத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
செங்கல்பட்டை தலைமை அலுவலகமாக கொண்டு பசித்தவருக்கு உணவு வழங்கும் குழுவானது கடந்த 2019 ஆம் ஆண்டு கரிமேடு பாலாஜி தலைமையில் 5 பேர் கொண்ட நண்பர்கள் சேர்ந்து தங்கள் கையில் இருக்கும் பணத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 94 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் மதுரை, சேலம் மற்றும் இதர மாவட்டங்களில் பசித்தவருக்கு உணவு வழங்கும் குழு அமைத்து சாலையில் வசிக்கும் மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், உதவியாளருக்கு தற்போது வரை உணவு வழங்கி வருகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கல்பட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் பசித்தோருக்கு உணவு வழங்கும் குழுவின் அமைப்பாளர் கரிமேடுபாலாஜி மற்றும் குழுவினரை அழைத்து மலா ¢மாலை அணிவித்து பாராட்டினார்.
அப்படிப்பட்ட திட்டத்துக்கு மருத்துவமனை டீன் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். இதனால் அவர் டீனா அல்லது டானா என்று ஏழைமக்கள் கேள்வி கேட்கின்றனர்.
ஆக, உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், பசித்தவருக்கு உணவு வழங்கும் குழுவினரை அழைத்து மீண்டும் மருத்துவ வளாகத்தில் இலவச உணவினை மீண்டும் வழங்கிட ஆவண செய்ய வேண்டுமென பொதுமக்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.