தமிழில் கோப்பு பார்க்கும் அலுவலருக்கு ஆட்சியர் தரும் பரிசு!

தமிழில் கோப்பு பார்க்கும் அலுவலருக்கு ஆட்சியர் தரும் பரிசு!

 கு.அசோக்,

 அதிகாரிகள் கோப்புகளை தமிழ்மொழியையே பயன்படுத்த வேண்டும் -  அவ்வாறு பயன்படுத்தும் துறைகளில் அதிக அளவு கோப்பைகளில் தமிழை பயன்படுத்திய துறையை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசளிக்கப்படும் - தமிழ்வளர்ச்சித்துறை கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு

  வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.

   நிறைவு நாளான இன்று தமிழ் குறித்து நடத்தப்பட்ட கட்டுரை போட்டி பேச்சு போட்டி கவிதை போட்டி ஆகியவைகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசுகள் சான்றுகளை வழங்கினார் இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் தமிழ்த்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

   இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் அதிகாரிகள் தமிழில் பேச வேண்டும் அதே போன்று அலுவலக கோப்புகளிலும் தமிழ் மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் அவ்வாறு அனைத்துறைகளிலும் செய்தால் எந்ததுறையில் அதிக அளவிலான கோப்புகளில் தமிழ் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்துறைக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று பேசினார்

  பின்னர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு பருவ மழை ஆலோசனை கூட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழையின் போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் மேலும் ஏரி கால்வாய்களை தூர்வாரி மழை நீர் ஏரிகளுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும்,

   மழைக்கு முன்பாக பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என கூறப்பட்டது இக்கூட்டத்தில் மாநகராட்சி நகராட்சி மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.