அருவியில் சிக்கித்தவித்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்ட வன அலுவலர்!

 எம்.ரபிக் ராஜா,

 அருவியில் சிக்கிதவித்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டதுடன், வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களை, வேட்டையாடும் வனத்துறை அதிகாரி டேவிட்ராஜன் வன ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

 தேனி மாவட்டம், பெரியகுளம், தேவதானப்பட்டி இதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இயற்கை வளங்கள் நிறைந்த சொர்க்க பூமியான கொடைக்கானல்,  மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

    இங்கு பல்வேறு வகையான அரிய வகை உயிரினங்களும் மூலிகை செடிகளும் விலை உயர்ந்த மரங்களும் மருத்துவ குணமுள்ள நீர்நிலைப் பகுதிகளும் அருவிகளும் உள்ளன.

   விடுமுறை நாட்களில் தமிழகமெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் ஒரு சிறந்த பொழுதுபோக்கு தளமாக இருப்பதால் இப்பகுதிக்கு லட்சக்கணக்கான மக்கள் வெளியூர்களில் இருந்து வந்து இப்பகுதியில் உள்ள இயற்கை வளங்களை கண்டு களித்து அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

 இந்நிலையில் இங்கு வனத்துறை அதிகாரியான திரு டேவிட் ராஜன் அவர்கள் பல்வேறு வழிகளில் இயற்கை வளங்களை பாதுகாப்பதோடு,  அருவியில் குளிக்கும் போது தவறவிட்ட பொருட்களை உரியவர்களிடம் எடுத்து கொடுத்தும் இயற்கை சீற்றமான காட்டாற்று வெள்ளங்களில் சிக்கித் தவித்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை உயிரை பணயம் வைத்து மீட்டுள்ளார்.

 தற்பொழுது அறிய வகை வன உயிரினங்கான மானை வேட்டையாடி அதன் இறைச்சிகளை சாக்கு பைகளில் கட்டி திருடி விற்பனை செய்ய முயன்ற கயவர்களை கண்டுபிடித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

   அவரது பணியையும், அவரையும் பொதுமக்களும், வன ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள்.