பொதுமக்களை மறியலுக்கு தூண்டிய வாணியம்பாடி வட்டாட்சியர்!

ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடியில் பட்டா வழங்க கோரி கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் உள்ள கனகாமேடு என்ற  பகுதியில்  அரசுக்கு சொந்தமான இடத்தில் 50 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் தற்காலிகமாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

 இந்நிலையில் அந்த இடத்தை  திருநங்கைகளுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறையினர்  முடிவு செய்து அங்குள்ளவர்களை  காலி செய்துகொள்ள  வருவாய்த்துறையினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

மேலும் அங்கு வசித்து வந்த சிலருக்கு பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்படியிருக்க பட்டா கிடைக்க பெறாத சுமார் 20 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத்திட  முறையிட்டுள்ளனர். இதுகுறித்து வட்டாட்சியர் சம்பத் முறையான பதில் அளிக்காமால் தெனாவட்டகா பேசி மக்களை ஆத்திரமடைய வைத்தார்.

 எனவே கிராம மக்கள் குடும்பத்துடன்  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பின்னர் வட்டாட்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தகுதி வாய்ந்த நபர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கலைந்து சென்றனர்.

 இதனால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

 இது குறித்து வாணியம்பாடி வாசி ஒருவர் தெரிவிக்கையில் வட்டாட்சியர் சம்பத் மக்கள் பணிகளை செய்வதற்கு கூட அன்பளிப்பு எதிர்பார்க்கிறார். இப்ப கூட இந்த மறியலே அவரால் தான் தூண்டப்பட்டது, அவரை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விசாரித்தால் பல முறைகேடுகள் அம்பலமாகும் என்கிறார்கள்.