நாற்றம் பிடித்த ஏலகிரி மலை! ஆபிசர்ஸ் ப்ளீஸ் நோட் இட்!

நாற்றம் பிடித்த ஏலகிரி மலை! ஆபிசர்ஸ் ப்ளீஸ் நோட் இட்!

  ஜி.கே.சேகரன்,

 ஏலகிரி மலையில் குவியும் குப்பைகளால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பு - மாவட்ட நிர்வாகம் சுற்றுலாதளத்தை தூய்மையாக்கிட நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத் தளமாக விளங்கி வரும் ஏலகிரி மலைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றம் வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.

 இதற்கிடையே மாவட்ட நிர்வாகத்தால் கடந்த 2019 ம் ஆண்டு ரூபாய் 18 லட்சம் செலவில் குப்பைகளை தரம் பிரித்து அகற்ற தேவையான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு  இருந்தும் அதை முறையாக பராமரிக்காமல் தற்போது மாட்டுக் கொட்டகையாக செயல்பட்டு வருகிறது.

   இதன் காரணமாக ஆங்காங்கே சாலையோரங்களில் குப்பைகளை மலைபோல் குவித்து வைத்துள்ளனர்.

   மேலும் முக்கிய பேருந்து நிறுத்தமான, அத்தனாவூர் பகுதியில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய சார்பில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளும் பராமரிக்கப்படாமல் உள்ளே கால் வைக்க முடியாத நிலையில், பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. 

   எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு குப்பைகளை கொட்ட தகுந்த இடமும் அதற்கான கட்டமைப்பையும் ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

   இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, குப்பைகளை அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கொட்டுவதற்காக எடுத்துச் செல்கிறோம்.

  அப்போது அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் சண்டையிட்டு குப்பைகளை கொட்ட கூடாது என தடுத்து வருகின்றனர்.

   இதன் காரணமாக ஏலகிரி மாலையில் குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளது என தெரிவித்தனர்.