எம்.எல்.ஏ.துவங்கி வைத்த மிலாது நபி விழா!

கு.அசோக்,
வேலூர் சார்பனாமேடு பகுதியில் நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி விழா முன்னிட்டு காலை முதல் இரவு வரையில் 5 ஆயிரம் பேருக்கு தொடர் அன்னதானம் அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவுகள் வழங்கப்பட்டது.
வேலூர்மாவட்டம்,வேலூர் சார்பனாமேடு பகுதியில் இன்று நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபியை முன்னிட்டு சார்பனாமேடு பகுதியில் வண்ண விளக்குகளால் மசூதி அலங்கரிக்கப்பட்டது.
யூசூப் கான் மற்றும் கலிமுல்லா உள்ளிட்டோர்களின் தலைமையில் 1200 கிலோ அரிசி மற்றும் காய்களை கொண்டு உணவு சமைத்து காலை முதல் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.
இந்த அன்னதான விழாவில் சாதி மத வேறு பாடுகளின்றி இந்துக்கள்,இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் என அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவுகள் வழங்கப்பட்டது.