அ.தி.மு.க.பிரதர்ஸின் அடாவடி!

அ.தி.மு.க.பிரதர்ஸின் அடாவடி!

  விநோத்,

 ஏரிக்கரையை ஆக்கிரமித்து அ.தி.மு.க.பிரதர்ஸ் அடாவடி செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பூனிமாங்காடு ஏரிக்கரை அடுத்து, வெங்கடாபுரத்தில் வசிக்கும் மோகன் மற்றும் தனஞ்செயன். அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர்கள் சகோதரர்கள் ஆவார்கள்.

 இவர்கள் சுமார் பத்து ஏக்கருக்கும் மேல் பூனிமாங்காடு ஏரியை அபகரித்து ஆறு வருடங்களாக கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 மேலும் இந்த சகோதரர்கள் விவசாயம் செய்வதால் ஏரிக்கரையில் தண்ணீர் நிற்பதற்கு வாய்ப்பில்லாமல் போவதாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  இது குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் வேதனையில் உள்ளனர்.