துரைமுருகன் ஒருமையில் பேசுவதால் அ.தி.மு.கவிற்கு தாவினோம்! காட்பாடியில் பரபரப்பு!

துரைமுருகன் ஒருமையில் பேசுவதால் அ.தி.மு.கவிற்கு தாவினோம்! காட்பாடியில் பரபரப்பு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  வேலூர் மாவட்டம், காட்பாடி திமுக இலக்கிய அணியைச் சேர்ந்த சி.இளங்கோவன் திமுகவில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

   வேலூர் மாநகர அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் இணைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  இதுகுறித்து இள்ங்கோவன் கூறும்போது காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் சாதிப்பாகுபாதுடனும், உழைப்பவர்களுக்கு மரியாதை தராமல் ஒருமையில் பேசுவதும் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே பதவிகளை தருவதும் பொறுப்புகளை தருவதுமாக உள்ளார்.

 காட்பாடி பகுதிக் கென்று எந்த முன்னேற்றப் பணிகளையும் ஆற்றவில்லை.

 இதனாலேயே நாங்கள் அனைவரும் அதிமுகவில் இணைந்துள்ளோம்.

 வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை பெருமளவில் வெற்றி பெறச் செய்வதும், வேலூர் மாநகர மற்றும்  நகர தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வெற்றி பெறச் செய்வது மட்டுமே எங்கள் சிறந்த பணியாக இருக்கும் என்று கூறினார்.