உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு அடிசறுக்கும்?

ஆர்.ராஜேஷ்குமார்,
அதிமுக - பாஜக ஆட்சி மீதான பொதுமக்களின் கோபத்தினால்,
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுக, 2022 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பலம் இருந்தும் ஒட்டு எண்ணிக்கை அடிப்படையில் ' ஜஸ்ட் பாஸ் ' ஆனது,
ஆளுங்கட்சி என்ற ஓதாவுடன் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கி உள்ள திமுக '90 சதவீதம் இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாம்.? மாநில உளவுத்துறை இப்படி கொடுத்த சர்வே ரிப்போர்ட்டால், ஸ்டாலின்நேரடி பிரச்சாரத்தை தவிர்த்திருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வரும் போது, அதிமுக மகளிர் அணியை களமிறக்கி, 'வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா?' என குரல் கொடுக்க வைக்க அதிமுக மா.செ.க்கள் திட்டமிடுவதாக உளவுத்துறையினர் மோப்பம் பிடித்து உள்ளனர்.
இதுவும் முதல்வருக்கு சொல்லப்பட்ட நிலையில், நேரடி பிரச்சாரத்தை தவிர்த்தார் ஸ்டாலின் என்று தெரிகிறது.
இதனால் களத்தில் நிலைமை மாறியுள்ளது. இதை திமுகவினர் உணர்ந்து பதட்டம் அடைந்து உள்ளார்களாம்.
மக்களுக்கு நேரடியாக பலனைக் கொடுக்கக்கூடிய முக்கிய வாக்குறுதிகள் எதுவும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படாததால், எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாக மாறி விடுமோ என அஞ்சுகின்றனர்.
குறிப்பாக, பொங்கல் பரிசு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 பவுன் தங்கக்கடன் தள்ளுபடி ஆகியவற்றில் திமுக ஆட்சி கோட்டை விட்டு விட்டது. நீட், 7 பேர் விடுதலை, ஏழைகளுக்கு வீடு, அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், தேர்தலுக்கு முன் பேசிய வேகமும் இப்போது செயல்பாட்டில் இல்லை.
அதுவும் இல்லாமல், அரசு நிர்வாகத்தில் பணிமாற்றம் தொடங்கி, புதிய வேலைவாய்ப்பு வரை எல்லாமே முடங்கி போய் உள்ளது.
எனவே, பொதுமக்களின் கோபம் ஸ்டாலினின் நேரடி பிரச்சாரத்தில் எதிரொலித்தால் அது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதாலும் நேரடி பிரச்சாரத்தை தவிர்க்க அறிவுரை சொல்லப்பட்டு உள்ளது.
தற்போது கள நிலவரம் திமுகவுக்கு சற்று எதிர்மறையாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்து வருகிறதாம். இதனை எப்படி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வது என்கிற தயக்கம் அவர்களிடம் இருக்கிறதாம்.
எந்தெந்த மாவட்டத்தில், எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவுக்கு வீக் என தகவல் கிடைத்துள்ளதோ அதனை சரி செய்யுமாறு திமுக அமைச்சர்களிடம் தகவலை பாஸ் செய்து உள்ளனராம். இதனால் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் இப்போதே வேலையில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத வெற்றி என ரிப்போர்ட் தந்திருப்பதால் அதனை மெய்ப்பிக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறார்கள்.
எதிர்க்கட்சி வலுவாக இல்லாத சூழல், பாஜக மீதான எதிர்ப்பு ஆகியவற்றை வைத்து எப்படியும் வெற்றி பெற்று விட முடியும் என திமுகவினர் கள நிலவரம் பற்றி மூச்சு விடாமல் உள்ளனர்.
எப்படி மூடி மறைத்தாலும் சந்தைக்கு வந்தால் எல்லாமே தெரிந்து விடப்போகிறது.