தமிழ்தாய் வாழ்த்தும் இல்லை...தேசிய கீதத்தையும் மறந்தனர்!என்னங்க ஆபிசரு இவுங்க!

தமிழ்தாய் வாழ்த்தும் இல்லை...தேசிய கீதத்தையும் மறந்தனர்!என்னங்க ஆபிசரு இவுங்க!
S.காவியபிரியன்,
ஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கடிதம் எல்லாம் எழுதினார் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் பாருங்க திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தமிழ்தாய் வாழ்த்தும் இல்லை...தேசிய கீதத்தையும் மறந்தனர்.
அந்த லட்சணத்தில் அரசு அலுவலர்களின் லட்சணம் உள்ளது.
அதாவது, திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டம் இன்று 29/11/2021 திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில்
நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்திருமதி மு.வெண்மதி C/O சிங்காரவேலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி,திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
அப்படியிருக்க மக்கள் பிரதிநிதிகளின் முன்னர் இவ்வாறான துஷ்பிரயோகத்தை அரசு அலுவலர்கள் செய்துள்ளனர்.
இப்படிப்பட்ட அரசு அலுவலர்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும், ஆனால் அது நடக்குமா?
தமிழ் தாய் வாழ்த்து!
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!
தேசிய கீதம்
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.