எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க., பட்டா இல்லாத புறம்போக்கு நிலம்!முன்னாள் எம்.எல்.ஏ. பேட்டி!

ம.பா.கெஜராஜ்,
தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க.தொண்டர்களை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருக்கிறார்.
அந்த வகையில்,''வரும், 20ம் தேதிக்கு மேல், பயணத்தை துவக்க உள்ளார்,'' என, முன்னாள் எம்.எல்.ஏ.,செல்வராஜ் சொன்னார்.
அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எம்.ஏ., செல்வராஜ், அவிநாசி சாலையிலுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ., திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அதில், கோவை மாவட்டம் அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் படுதோல்வி அடைந்தது. கோவை முழுவதும் எனது தலைமையில் ஒவ்வொரு கிராமமும் சென்று, சைக்கிள் பேரணி நடத்தி கட்சியை பலப்படுத்துவோம். வரும், செப்., மாதத்தில் ஓ.பி.எஸ்., தலைமையில் வ.உ.சி., பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.
ஓ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க.,வே உண்மையானது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல இருக்கிறது. வரும், 20ம் தேதிக்கு மேல், ஓ.பி.எஸ்., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றார்.