பெண் வேட்பாளரை விரட்டிய ஊர் மக்கள்:- தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி!!

பெண் வேட்பாளரை விரட்டிய ஊர் மக்கள்:- தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி!!

ஜி.கே.சேகரன்,

  கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பை மீறி வேட்பு மனுவைதாக்கல் செய்த பெண் வேட்பாளரை துரத்திய கிராம மக்கள். வேட்பாளர் தப்பியோட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைகிராம மக்கள் தர்ணா போராட்டம்.

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிகுட்பட்ட காமன்தட்டு ,சீக்கஜோனை ,உள்ளிட்ட மலை  கிராமங்களில் எஸ் .டி சமுகத்தைச் சேர்ந்த 2889 வாக்காளர்களும், பொதுப்பிரிவினர் 551 வாக்காளர்கள் என 3440 வாக்காளர்கள் உள்ளனர்.

  கடந்த தேர்தல்களின் போது பெரும்பான்மையாக வசித்து வரும்  (எஸ்.டி)  சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு  ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இட ஒதுக்கீடு அளித்து வந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

  ஊராட்சியில் ஒருவர் கூட  இல்லாத சமூகத்தை சேர்ந்தவருக்கு இட ஒதுக்கீடு  அளிக்கப்பட்டுள்ளதை  காமன் தட்டு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சிவகுமார் ஆகியோர் சட்ட ரீதியாக எதிர்க்கிறார்கள்.

    நாயக்கனேரி ஊராட்சிக்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனவும்,இல்லையென்றால் நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து மக்களும் தேர்தலைப் புறக்கணிப்போம் என 300க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  அப்படியிருக்க வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியிடம் நேற்று மனு அளித்திருந்திருந்தனர்.

   இந்த நிலையில் நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட 9 கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிட முன் வராமல், ஊராட்சி மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க உள்ள நிலையில், இந்துமதி என்பவர் தன்னுடைய கணவருடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு செய்ய வந்தார்.

   அப்போது இந்துமதி போலிசாரிடம் தெரிவிக்கையில் என்னை வேட்பு மனுதாக்கல் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். நாங்கள் காட்டுவழியாக சுற்றிக்கொண்டு தான் இங்கு வந்தோம் என்றார்.

   இதனால் அங்கிருந்த நாயக்கனேரி  ஊராட்சிக்குட்பட்ட 9-வார்டு பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     பின்னர் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி மனுதாக்கல் செய்த  இந்துமதி என்ற பெண்ணை கிராம மக்கள் துரத்தியடித்தனர் பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.