வேலூர் டி ஐஜிக்கு கூடுதல் பொறுப்பு!

வேலூர் டிஐஜிக்கு கூடுதல் பொறுப்பு!ஜி.எஸ்.மேத்யூராஜ்,
வேலூர் சரக டி. ஐ.ஜி யாக ஏ.ஜி.பாபு, இ.கா.ப., அவர்கள் பணியாற்றி வருகிறார். வேலூர்,திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் கொண்ட சரகத்துக்கு இவர் டிஐஜி ஆவார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா, இ.கா.ப. அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக உணரப்பட்டதால் அவர் தனிமைப்படுத்திக் கொன்டுள்ளார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் சரக டிஐஜி பொறுப்பு வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் மேற்படி சரகத்துக்குட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சரகத்தின் கூடுதல் பொறுப்பையும் அவர் கவனிப்பார் என காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.