தட்டித் தூக்கும் தி.மு.க! பதுங்கி ஒதுங்கும் அ.தி.மு.க! 

தட்டித் தூக்கும் தி.மு.க! பதுங்கி ஒதுங்கும் அ.தி.மு.க! 

ம.பா.கெஜராஜ்,

  வேலூரில் இதுவரை அரங்கேறாத பல காட்சிகள் இந்த தேர்தலையொட்டி நடந்து வருகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த இளம் மாவட்ட செயலாளரின் திறமையே அதற்கு காரணம் என்கிறார்கள்.

  முன்பெல்லாம் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், குழு அமைப்பது, சின்னங்களை வரைய சுவர் பிடிப்பதில் துவங்கி ஆட்டோ பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம் என சும்மா அதிரும்.

  டி.என்.சேஷன் தேர்தல் ஆணையாளராக வந்து அவர் வெளிகொணர்ந்த தேர்தல் விதிகளுக்கு பின்னரும் அவை பரவலாக காணப்பட்டன.

  ஆனால் தற்போது அந்த வியூகம் எல்லாம் மலையேறிவிட்டன.

  சோஷியல் மீடியாக்களும் சற்று தூக்கலாக தேர்தல் பணிகளை துவங்கிவிடவே தினசரிகளின் பேக்கஜ் கட்டிங்கும் கேள்விக்குறியாகி வருகிறது.

  இந்த சூழலில் தான் இந்த தேர்தலில் வேலூர் திமுக புதிய அனுகுமுறைகளை கையாண்டு அ.தி.மு.க.வைதட்டி தூக்கியிருக்கிறது.

 அது குறித்து சுறுக்கமாக பார்ப்போம்,

 வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன.

 இவற்றில் வார்டு எண்கள் 2,7,8 மற்றும் 24 வது வார்டுகளில் மனுதாக்கல் செய்திருந்த அதிமுக வின் அதிகாரபூர்வமான வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறன.

 அதில், 2- வது வார்டுக்கு திமுக சார்பில் விமாலா சீனிவாசனும், அதிமுக சார்பில் கார்த்தி என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 7- வது வார்டில் புஷ்பலதா என்பவர் திமுக சார்பிலும், அதிமுக சார்பில் தனலட்சுமி என்பவரும் மனுதாக்கல் செய்தனர்.

  மேலும் 8 வது வார்டில் திமுக வேட்பாளராக சுனில்குமாரும், அதிமுக வேட்பாளராக சுரேஷ் குமார் என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

  இதே போல் 24 வது வார்டில் அதிமுக சார்பில் வினோத்குமார் என்பவரும், திமுக சார்பில் சுதாகர் என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

  இந்நிலையில் மேற்படி நான்கு அ.தி.மு.க. வேட்பாளரின் வேட்புமனுக்களைதேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். அதற்காக பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

 இதை ஏற்காத 24 வது வட்ட அ.தி.மு.க.வினர் அவர்களது மாவட்ட செயலாளர் அப்பு என்பவரை வரவழைத்து அலுவலர்களிடம் விவரித்துப் பார்த்தனர். அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அலுவலர் வசந்தி ஒருதலைபட்சமாக செயல்படுவதிலேயே குறியாக இருந்தார்.

   இதனால் சாலை மறியல் எல்லாம் நடந்தது.

  அப்படியிருக்க, நிராகரிக்கப்பட்ட அதிமுக வேட்பாளார்களுக்கு பதில் முன்னேற்பாடாக மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த மாற்று வேட்பாளார்களுக்கு சில வார்டுகளில் வாயுப்பு அளிக்கப்பட்ட போதிலும் 8 வது வார்டில் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

   மேற்படி வார்டில் மனுதாக்கல் செய்த பாஜக வேட்பாளர் ராஜா தியாகராஜன் மனு உள்ளிட்ட ஒட்டு மொத்த நான்கு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.(26 வது வார்டிலும் பாஜக வேட்பாளாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அப்படியிருக்க அதே வார்டில் திமுக வேட்பாளர் சேகர் என்பவர், அவரது தந்தை பெயரை வேட்பு மனுவில் மறைத்து அதை மாற்றி கொடுத்திருக்கும் விஷயத்தை பா.ஜ.க கையில் எடுத்துள்ளது).

  இந்நிலையில் 8 வது வார்டுக்கு திமுக வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி கவுன்சிலரானார், அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  அதற்கான  அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியானதும், அவர் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று திரும்பியுள்ளார்.

  இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சுனில்குமார் ஜெயிக்கக்கூடாது என்று திமுக வின் முக்கியஸ்தர் தரப்பிலேயே திட்டமிடப்பட்டதாம். அதையறிந்த இளம் மாவட்ட செயலாளர் ஒருவர் மேற்படியாக திட்டமிட்டு சுனில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட காரணமாக அமைந்தார் என்று கூறப்படுகிறது.

  திமுக சைடில் இப்படியிருக்க அ.தி.மு.க.பெப்பே என்று திகைத்துக் கொண்டிருக்கிறது. அந்த பக்கம் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு திட்டமிடல் குறைபாடு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    முன்னாள் அமைச்சர் ஒருவர் இன்றளவுக்கும் வேலூர் அரசியலில் தலையிட்டு குழப்பிக் கொண்டிருப்பதாவும், அவர் மாவட்டத்தை போய் பார்த்து தேர்தல் பணியை செய்யாமல் எங்களை முடக்கி போட்டிருக்கிறார் என்று ர.ர.க்கள் குமுறுகிறார்கள்.

  குறிப்பு:-  அதிமுக மா.செ.அப்பு மாநகராட்சி ஆணையர் அசோக்குமாரை சந்தித்து திமுக வினர், அதிமுகவினரின் வேட்பு மனுவினை நிராகரிக்க திட்டமிட்டுள்ளனர் என முன் கூட்டியே புகார் அளித்தார்.