பிரதமர் என்னை ஓய்வெடுக்க சொன்னார்:-முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

பிரதமர் என்னை ஓய்வெடுக்க சொன்னார்:-முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

 பிரதமர் என்னை ஓய்வெடுக்க சொன்னார் என்று முதல்வர் ஸ்டாலின் செஸ் துவக்கவிழாவில் பேசினார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை. முதல் முறையாக தமிழகத்தில் நடப்பது பெருமையாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள வீரர்களை வரவேற்கிறேன்.

  நேரு உள்விளையாட்டு அரங்கிற்குபன்னாட்டு பெருமை சேர்க்கும் வகையில் விழா அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக எழுச்சியோடு நடந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்த போது 20 ஆயிரம் வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் மோடி.

   இந்த போட்டியை துவக்க நேரில் அழைக்க திட்டமிட்டிருந்தேன். அப்போது கொரோனா தொற்று ஏற்பட்டது. நலம் விசாரிக்க தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது எனது நிலையை சொன்னேன்.அப்போது மோடி, ஓய்வெடுத்து கொள்ளுங்கள். நிச்சயம் கலந்து கொள்வேன் என்றார்.

  மேலும், இந்த போட்டி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விழா என்றார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடப்பதாக இருந்தது. ஆனால், கோவிட் மற்ற பிரச்னைகளால் நடத்த முடியாமல் போனது. இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு வருமானால், தமிழகத்தில் நடக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். மார்ச் மாதம் இதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டேன்.

  பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்ய 18 மாதங்கள் ஆகும். ஆனால், தமிழக அரசு 4 மாதங்களில் செய்துள்ளது.இப்போட்டியின் மூலம் தமிழக விளையாட்டு துறை மட்டுமல்ல சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர உள்ளது. தமிழக அரசின் மதிப்பு மேலும் மேலும் உயர உள்ளது. இது சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. சரியான திட்டமிடல், கடின உழைப்பு. அதனால் உயர்வு ஏற்பட்டுள்ளது.

  துவக்க விழா இங்கு நடந்தாலும் போட்டி முழுமையாக மாமல்லபுரத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதுசெஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த ரூ.102 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.

   இந்த போட்டியை துவக்கி வைக்க வருகை தந்ததற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற வாய்ப்புகளை தமிழகத்திற்கு மீண்டும் மீண்டும் தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன். கருப்பு வெள்ளை மைதானமாக காட்சி தருவது சதுரங்கம். கீழடியில் ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 2 வகை ஆட்டக்காய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை செஸ் விளையாட பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

   மொத்தம் 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகம் தான் செஸ் தலைநகரமாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.